தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சிவகங்கை அருகே மாக மாரியம்மன் சித்திரை பொங்கல் திருவிழா: அம்மை நோயை விரட்டும் வினோத வழிபாட்டால் களைகட்டிய கிராமம்!

Advertisement

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே மகா மாரியம்மன் கோயில் சித்திரை பொங்கல் திருவிழாவை முன்னிட்டு அம்மை நோயை விரட்டும் வழிபாடு நடைபெற்றது. சிவகங்கை மாவட்டம் கட்டுக்குடிபட்டியில் உள்ள மகா மாரியம்மன் கோயிலில் கடந்த ஞாயிற்று கிழமை சித்திரை பொங்கல் விழா காப்பு காட்டுதலுடன் தொடங்கியது.

விழாவில் ஆண்களும், பெண்களும் முகத்தில் சாயத்தை பூசி கொண்டு எல்லையம்மாள், சின்ன கருப்பர் கோயில் முன்பு கும்மியடித்தும், பல்வேறு தெய்வங்களின் வேடம் தரித்தும் சாமியாடி தங்கள் நேர்த்தி கடனை செலுத்தி பறை இசை முழங்க நடந்த பொய்க்கால் குதிரை ஆட்டத்துடன் இளைஞர்களும், சிறுவர்களும் நடனம் ஆடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

பழங்கள், பச்சை காய்கறிகளால் அலங்கரிக்கப்பட்ட மகா மாரியம்மன் கோயில் முன்பு கோழி இறகு மீசையும், தலையில் கோழி இறகு கொண்ட கூடையையும் சுமந்தவாறு கையில் உலக்கையோடு வந்த பூசாரி கோயிலை சுற்றி சுற்றி வலம்வந்து அம்மை நோயை விரட்டும் நிகழ்வு நடைபெற்றது. அப்போது பூசாரியை வேப்பிலையோடு சிறுவர்கள் விரட்டினர். இதன்மூலம் திருஷ்டி கழியும் என்றும் திருவிழா முடிந்ததும் மழை பொலிந்து விவசாயம் செழிக்கும் என்றும் கிராம மக்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Advertisement