தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சகோதரி, அவரது காதலனுடன் சதி வேலைகளை செய்து சொத்துக்காக மாமியாரை விஷ ஊசி போட்டுக் கொன்ற மருமகள்: இறுதிச் சடங்கில் பங்கேற்காததால் சிக்கினார்

Advertisement

ஜான்சி: சகோதரி, அவரது காதலனுடன் சேர்ந்து சதி வேலைகளை செய்து சொத்துக்காக மாமியாரை விஷ ஊசி போட்டுக் கொன்ற மருமகளை போலீசார் கைது செய்தனர். உத்தரப்பிரதேச மாநிலம், ஜான்சியில் கடந்த ஜூன் 24ம் தேதி, சுசீலாதேவி (60) என்பவர் தனது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். வீட்டிலிருந்த நகைகள் காணாமல் போயிருந்ததால், இது ஒரு கொள்ளைச் சம்பவம் என உறவினர்கள் கருதி, அவரது உடலை உடனடியாகத் தகனம் செய்தனர். இவ்விவகாரம் குறித்து போலீசாரும் விசாரணை நடத்தி வந்தனர்.

ஆனால், மாமியாரின் இறப்பிற்குப் பிந்தைய இறுதிச் சடங்குகளில் மருமகள் பூஜா ஜாதவ் கலந்துகொள்ளாமல் புறக்கணித்தார். அதனால், காவல்துறைக்கு அவர் மீது பெரும் சந்தேகத்தை ஏற்பட்டது. இந்த சந்தேகத்தின் பேரில் பூஜாவை விசாரித்தபோது, கொடூரமான சதித்திட்டம் அம்பலமானது. இறந்துபோன தனது கணவரின் பெயரில் இருக்கும் 18 சென்ட் நிலத்தை விற்றுவிட்டு, குவாலியரில் குடியேற பூஜா திட்டமிட்டுள்ளார். இதற்குத் தடையாக இருந்த மாமியார் சுசீலாதேவியைக் கொல்ல, தனது சகோதரி கமலா மற்றும் அவரது காதலன் அனில் வர்மாவுடன் சேர்ந்து திட்டம் தீட்டியுள்ளார்.

அவர்கள் வகுத்த சதித் திட்டப்படி, 125 கி.மீ பயணம் செய்து ஜான்சிக்கு வந்த கமலாவும் அனிலும், பூஜாவின் உதவியுடன் சுசீலாதேவிக்கு விஷ ஊசி போட்டுக் கொன்றுள்ளனர். மேலும், இது ஒரு கொள்ளைச் சம்பவம் போலத் தெரிய வேண்டும் என்பதற்காக, சுமார் 8 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளையும் திருடிச் சென்றுள்ளனர். தற்போது பூஜா மற்றும் கமலாவைக் கைது செய்துள்ள காவல்துறை, தப்பியோட முயன்ற அனில் வர்மாவை காலில் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Related News