தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இம்ரானுடன் சகோதரி சந்திப்பு: மனரீதியாக சித்ரவதை செய்வதாக பேட்டி

 

Advertisement

லாகூர்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது லாகூர், அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த 2023 முதல் சிறையில் உள்ள இம்ரானை பார்ப்பதற்கு கடந்த ஒரு மாதமாக யாருக்கும் அனுமதி அளிக்கப்படவில்லை. இம்ரானின் உடல் நிலை மோசமாகி இருக்கலாம் என்றும் சிறையிலேயே அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று சமூக ஊடகங்களில் சிலர் சந்தேகம் எழுப்பி வந்தனர்.

இதனால் இம்ரானின் குடும்பத்தினர், அவரது கட்சி தொண்டர்கள் சிறை முன் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து இம்ரான் கானை சந்திக்க அவரது சகோதரி உஸ்மா கானுக்கு அரசு அனுமதி அளித்தது. இந்த நிலையில் உஸ்மா கான் சிறையில் உள்ள இம்ரான் கானை நேற்று சந்தித்தார். அதன் பின் அவர் கூறுகையில்,‘‘ இம்ரான் நலமுடன் உள்ளார். அவர் உடல்நிலை நன்றாக உள்ளது. தனிமை சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவரை மனரீதியாக சித்ரவதை செய்கின்றனர்’’ என்று குற்றம்சாட்டினார்.

Advertisement