தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சிங்கப்பூர் பேட்மின்டன் 3 சீன வீராங்கனைகள் அரையிறுதிக்கு தகுதி

Advertisement

சிங்கப்பூர்: சிங்கப்பூர் பேட்மின்டன் ஓபன் மகளிர் ஒற்றையர் காலிறுதிப் போட்டிகளில் நேற்று, சீன வீராங்கனைகள் வாங் ஸி யி, ஹான் யு, சென் யுபெய், ஜப்பான் வீராங்கனை யமகுச்சி அபார வெற்றி பெற்று அரை இறுதிச் சுற்றுக்குள் நுழைந்தனர். சிங்கப்பூரில் சிங்கப்பூர் பேட்மின்டன் ஓபன் போட்டிகள் நடந்து வருகின்றன. நேற்று நடந்த காலிறுதிப் போட்டி ஒன்றில் சீன வீராங்கனை வாங் ஸி யி, தாய்லாந்து வீராங்கனை சோச்சுவாங் உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய வாங் ஸி யி, 21-17, 21-17 என்ற நேர் செட் கணக்கில் வென்றார். மற்றொரு போட்டியில் சீன வீராங்கனை ஹான் யு, ஜப்பான் வீராங்கனை நாட்சுகி நிதெய்ரா உடன் களம் கண்டார். இப்போட்டியில் 21-17, 21-15 என்ற நேர் செட் கணக்கில் ஹான் வெற்றி பெற்றார். 3வது காலிறுதியில் சீன வீராங்கனை சென் யுபெய், தென் கொரிய வீராங்கனை எஸ்.ஒய். ஆன் உடன் மோதினார்.

இப்போட்டியில் 21-13, 21-16 என்ற நேர் செட் கணக்கில் சென் வெற்றி வாகை சூடினார். 4வது காலிறுதியில் கனடா வீராங்கனை மிச்செல் லீ, ஜப்பான் வீராங்கனை ஏ. யமகுச்சி உடன் மோதினார். இப்போட்டியில் அபாரமாக ஆடிய யமகுச்சி, 21-15, 22-20 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார். வெற்றி பெற்ற 4 வீராங்கனைகளும் அரை இறுதிக்கு தகுதி பெற்றனர்.

* அரையிறுதியில் இந்திய வீரர்கள் ஆடவர் இரட்டையர் பிரிவு

சிங்கப்பூர் பேட்மின்டன் ஓபன் ஆடவர் இரட்டையர் காலிறுதிப் போட்டியில் நேற்று இந்திய வீரர்கள் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி, சிராக் சந்திரசேகர் ஷெட்டி இணை, மலேசியா வீரர்கள் கோ ஸெ பெ, நுார் இசுதின் பின் முகம்மது ரம்ஸானி இணையுடன் மோதியது. இப்போட்டியில் துடிப்புடன் செயல்பட்ட இந்திய இணை, 21-17, 21-15 என்ற நேர் செட் கணக்கில் வென்று அரை இறுதிக்கு முன்னேறியது.

Advertisement

Related News