தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சிங்கபெருமாள் கோயில் அருகே சாலையை தோண்டி ஜல்லி, மண் கடத்தல்: பொக்லைன் இயந்திரம் சிறைபிடிப்பு

Advertisement

செங்கல்பட்டு: சிங்கபெருமாள் கோயில் அருகே ஆப்பூர் கிராமத்தில் சாலையை தோண்டி ஜல்லி, மண் கடத்தல் நடந்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டம், சிங்கபெருமாள் கோயில் அடுத்த ஆப்பூர் கிராமத்தில் ஆட்டோ நகர் உள்ளது. இங்கு, அரசு சார்பில் வீட்டு மனைப்பிரிவுகளில் ஜல்லி மண் வைத்து சாலை அமைக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு போடப்பட்ட இந்த சாலையை சில மர்ம நபர்கள் தோண்டி எடுத்து அதில் உள்ள ஜல்லி, மண் ஆகியவற்றை பொக்லைன் இயந்திரம் மற்றும் லாரியை‌ பயன்படுத்தி திருடி, அருகில் உள்ள தொழிற்சாலை‌ பகுதிகளில் கூடுதல் விலைக்கு விற்று கொள்ளை லாபம் பார்த்து வந்துள்ளனர்.

இது சம்பந்தமாக ஆப்பூர் பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தும் ேதாண்டி எடுப்பதை நிறுத்தவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் சாலையை தோண்டி எடுக்கும்போது பொதுமக்கள் வாகனங்களை சிறை பிடித்தும் மண், ஜல்லி திருடுவதற்கு பயன்படுத்திய லாரி மற்றும் டிரைவர் தப்பியோடிவிட்டனர். இது சம்மந்தமாக தாசில்தார், கிராமநிர்வாக அலுவலர் மற்றும் வருவாய் ஆய்வாளர் ஆகியோருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Related News