தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சில்லி பாய்ன்ட்...

Advertisement

* தமிழ்நாடு பிரிமீயர் லீக்(டிஎன்பிஎல்) தொடரின் சேலம் களத்துக்கான ஆட்டம் நேற்றுடன் முடிந்தது. இன்று போட்டியின் ஓய்வு நாள். அடுத்து கோவை களத்துக்கான ஆட்டம் நாளை தொடங்குகிறது.

* இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் ஆட்டத்தில் 2004ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் வீரர் பிரைன் லாரா ஆட்டமிழக்காமல் 400ரன் குவித்தார். இச்சாதனை நிகழ்ந்து 20 ஆண்டுகள் கடந்த நிலையில் லாரா, ‘இந்த சாதனையை இந்திய வீரர்கள் சுப்மன் கில் அல்லது யாஷ்வி ஜெய்ஸ்வால் ஆகியோரால் மட்டுமே கடக்க முடியும்’ என்று தெரிவித்துள்ளார்.

* லண்டனில் நடைபெறும் விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டியின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டங்கள் இன்று நடக்கின்றன. அவற்றில் டானில் மெத்வதேவ்(ரஷ்யா)- கார்லோஸ் அல்கராஸ்(ஸ்பெயின்), லொரென்சோ முசெட்டி(இத்தாலி)-நோவக் ஜோகோவிச்(செர்பியா) ஆகியோர் மோத உளளனர்.

* அமெரிக்காவின் அதிபர் இந்தியா வந்தபோது அகமதாபாத்தில் உள்ள குடிசைகள் வெளியே தெரியக் கூடாது என்பதற்காக சுவர்கள் எழுப்பியும், திரைகள் கட்டியும் மறைக்கப்பட்டது வரலாறு. இப்போது பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிக்காக வீடற்ற ஒரு லட்சம் மக்களை பாரிசில் இருந்து அப்புறப்படுத்தும் பணி நடக்கிறது.

* தமிழ் நாடு டென்னிஸ் சங்கம் சார்பில் அகில இந்திய அளவிலான டென்னிஸ் போட்டி சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெற உள்ளது. இம்மாதம் 20ம் தேதி முதல் 28ம் தேதி வரை நடைபெற உள்ள இந்தப் போட்டியில் நாடு முழுவதிலும் இருந்து மாநில வாரியாக வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். இதன் கூடவே சக்கர நாற்காலி டென்னிஸ் போட்டியும் நடைபெறும். இந்த தகவல்களை தமிழ்நாடு டென்னிஸ் சங்கத்தின் தலைவர் விஜய் அமிர்தராஜ் நேற்று தெரிவித்தார்.

Advertisement