தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சிலந்தியாற்றில் கட்டப்படுவது தடுப்பணை அல்ல: கேரள நீர்ப்பாசனத் துறை அமைச்சர் பேட்டி

Advertisement

திருவனந்தபுரம்: சிலந்தியாற்றில் கட்டப்படுவது தடுப்பணை அல்ல, அப்பகுதியிலுள்ள ஆதிவாசிகள் குடும்பத்தினருக்கான குடிநீர் திட்டம்தான் செயல்படுத்தப்படுகிறது என்று கேரள நீர்ப்பாசனத் துறை அமைச்சர் ரோஷி அகஸ்டின் கூறினார். இடுக்கி மாவட்டத்திலுள்ள சிலந்தியாற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணை கட்டுவதற்கான பணிகளை தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் கேரள நீர்பாசனத்துறை அமைச்சர் ரோஷி அகஸ்டின் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது, “இடுக்கி மாவட்டம் வட்டவடா அருகே உள்ள சிலந்தியாற்றில் கேரள அரசு தடுப்பணை கட்டுவதாக வெளியான தகவலில் எந்த உண்மையையும் கிடையாது.

ஜல்ஜீவன் நீர்ப்பாசனத் திட்டத்தின் கீழ் வட்டவடா பஞ்சாயத்திலுள்ள சிலந்தியாற்றில் குடிநீர் விநியோகத் திட்டத்தை செயல்படுத்த தீர்மானிக்கப்பட்டது. இந்தப் பகுதியில் வசிக்கும் ஆதிவாசி குடும்பத்தைச் சேர்ந்த 7 ஆயிரம் பேருக்காக இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இங்கு நீர்வீழ்ச்சி இருப்பதால் ஆற்றிலுள்ள தண்ணீர் சமநிலையாக இல்லை. இதனால் குடிநீர் வினியோகம் செய்ய முடியாது. இதன் காரணமாக தண்ணீரை சமநிலைப்படுத்தும் பணிகள் தான் தற்போது நடைபெற்று வருகின்றன தடுப்பணை கட்டவில்லை. இந்தத் திட்டம் செயல்படுத்துவதால் அமராவதி நதிக்கு செல்லும் தண்ணீர் குறையாது. தமிழக நீர்ப்பாசனத் துறை அதிகாரிகள் நேற்று இந்தப் பகுதிக்கு வந்து பார்த்து விட்டு சென்றனர் ” என்று கூறினார்.

Advertisement