Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

உளுந்தூர்பேட்டையில் புதிய பேருந்து நிலையம் அமைக்க இடம் தேர்வு செய்ய அமைச்சர் நேரு உத்தரவு: விசிக எம்பி ரவிக்குமார் வரவேற்பு

சென்னை: உளுந்தூர்பேட்டையில் புதிய பேருந்து நிலையம் அமைக்க இடம் தேர்வு செய்ய அமைச்சர் நேரு உத்தரவிட்டதற்கு விசிக எம்பி ரவிக்குமார் வரவேற்பு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று சென்னை கலைவாணர் அரங்கில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் நடைபெற்றுவரும் ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்று

* கோட்டக்குப்பம் நகராட்சி கட்டடத்தை வேறு இடத்தில் கட்ட வேண்டும்;

* அனைத்துப் பேரூராட்சிகளிலும் நூலகத்துடன்கூடிய அறிவுசார் மையம் அமைத்துத்தர வேண்டும்;

* நகராட்சிகளிலும், பேரூராட்சிகளிலும் மின் மயானம் அமைக்க வேண்டும்;

* நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மாநகராட்சிகளில் செய்திருப்பதுபோல நகராட்சி சார்பில் அலுவலக வசதி செய்துதர வேண்டும்

* உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துப் பேசினேன். அத்துடன், இந்தக் கோரிக்கைக் கடிதத்தையும் அளித்தேன்.

* நான் கேட்டதன் அடிப்படையில் உளுந்தூர்பேட்டையில் புதிய பேருந்து நிலையம் அமைக்க இடத்தைத் தேர்வு செய்யுமாறு அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார். நகராட்சி சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அலுவலக வசதி செய்து தரவும் உத்தரவிட்டார். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.