Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 18 மணிநேரம் காத்திருந்து தரிசனம்

திருமலை: தொடர் விடுமுறை காரணமாகவும், பள்ளிகளில் தேர்வுகள் முடிந்து கோடை விடுமுறை தொடங்கியுள்ளதாலும் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு பக்தர்களின் வருகை அதிகரித்து வருகிறது. நேற்று 78,821 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 33,568 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். சுவாமி தரிசனம் செய்த பக்தர்கள் கோயில் உண்டியலில் ரூ.3.36 கோடியை காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.

இன்று காலை நிலவரப்படி வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள அறைகள் முழுவதும் நிரம்பியுள்ளது. பக்தர்கள் கிருஷ்ணா தேஜா தங்கும் விடுதி வரை நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். இவர்கள் 18 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். ரூ.300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் 4 மணி நேரத்தில் தரிசனம் செய்தனர்.