Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

அதிகவேகத்தை தாங்கும் ரயில் சக்கரம் உற்பத்தி தொழிற்சாலை 2026 மார்ச்சில் பயன்பாட்டுக்கு வரும்: அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேட்டி

சென்னை: அதிகவேகத்தை தாங்கும் ரயில் சக்கரம் உற்பத்தி தொழிற்சாலை 2026 மார்ச்சில் பயன்பாட்டுக்கு வரும் என ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம் புதுவாயலில் ரயில் சக்கரம் தொழிற்சாலை கட்டுமான பணியை ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேரில் ஆய்வு செய்தார். சென்னை ஐ.எசி.எப் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட 'அம்ரித் பாரத்' ரயில் பெட்டிகளை ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பார்வையிட்டார். பின்னர் ஒன்றிய அமைச்சர் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்;

சென்னைக்கு வருவதை விரும்புகிறேன். பாம்பன் புதிய ரயில் பாலம் பணிகள் நிறைவடைந்துள்ளன. புதிய பாம்பன் தூக்கு பாலத்தின், வடிவமைப்பு தனித்துவமானது. 80000 சக்கரங்கள் இந்திய ரயில்வேயில் பயன்படுத்தப்பட்டு மீதமுள்ள சக்கரங்கள் உலகநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும். 2 லட்சத்திற்கும் மேற்பட்ட உற்பத்தி திறன் கொண்ட இரும்பு அச்சு முறை மூலம் உருவாக்கப்படும். ரயில் சக்கரங்களை மற்ற பகுதிகளுக்கு எடுத்துச் செல்ல துறைமுகங்களுக்கு அருகிலேயே தயாரிக்கப்படவுள்ளது. என்று தெரிவித்தார்.