Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad Cements
search-icon-img
Advertisement

காந்தி ஜெயந்தியில் அரசியல் கட்சி தொடங்கினார் பிரசாந்த் கிஷோர்..!!

Prashant Kishorபாட்னா : தேர்தல் வியூக நிபுணர்களில் முதன்மையானவராக கருதப்படுபவர், பீகார் மாநிலத்தை சேர்ந்த பிரசாந்த் கிஷோர்.பீகார் மாநிலத்தில் அடுத்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது.இதைமுன்னிட்டு, அம்மாநிலத்தை சேர்ந்த பிரசாந்த் கிஷோர் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வகையில் புதிய கட்சி ஒன்றை தொடங்கி உள்ளார்.

இந்நிலையில் காந்தி ஜெயந்தியான இன்று அரசியல் கட்சியின் பெயரை அறிவித்துள்ளார். கட்சிக்கு ' ஜன் சுராஜ்' என பெயர் வைத்துள்ளதாக கூறியுள்ள இவர், வரும் தேர்தலில் பீகாரில் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட போவதாகவும், ஆட்சி அமைத்தால், மாநிலத்தில் அமலில் உள்ள மதுவிலக்கை ரத்து செய்வேன்; மதுக்கடைகளை திறப்பேன் என உறுதி அளித்துள்ளார்.

பீகார் மக்களுக்கு மாற்று அரசியலை அளிக்கப்போவதாகவும்,. கடந்த 25 முதல் 30 ஆண்டுகளாக மக்கள், ஆர்.ஜே.டி., கட்சிக்கும், பா.ஜ.,வுக்கும் மாறிமாறி ஓட்டுப் போடுகின்றனர். இது மாற்றப்பட வேண்டும். மாற்று அரசியலை கொண்டு வருபவர்கள் வாரிசு அரசியல்வாதியாக இருக்கக்கூடாது. என்றும் கூறினார்.