Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் அலங்காரம் கூடுதல் நாட்கள் வைக்க முடிவு

ஊட்டி: சுற்றுலா பயணிகள் வருகை தொடர்ந்து இருப்பதால், ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் தொட்டி அலங்காரங்கள் மேலும் சில நாட்களுக்கு வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். தற்போது 2வது சீசன் என்பதால், வெளிமாநில மற்றும் வெளி நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் அதிகளவு வருகின்றனர். கடந்த செப்டம்பர் மாதம் துவங்கிய 2ம் சீசன் நாளையுடன் முடிகிறது. கடந்த 2 மாதங்களில் ஆயுத பூஜை விடுமுறை, தீபாவளி விடுமுறை உள்ளிட்ட அரசு விடுமுறை மற்றும் வார விடுமுறை என தொடர் விடுமுறை வந்ததால், ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிந்தனர்.

இவர்களை மகிழ்விக்கும் பொருட்டு ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் 15 ஆயிரம் தொட்டிகளை கொண்டு பல்வேறு மலர் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. சிறிய புல் மைதானத்தில் அழகிய வடிவங்களில் மலர் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. கடந்த வாரம் பெய்த மழையால், இந்த தொட்டிகளில் வைக்கப்பட்டிருந்த மலர் செடிகள் அழுகியதாலும், சில தாவரங்கள் அதிகளவில் வளர்ச்சியடைந்ததால், அலங்காரங்கள் அலங்கோலமாக காட்சியளித்தது.

மேலும், புல் மைதானங்களும் சேறும் சகதியுமாக மாறியது.

எனவே, அலங்காரங்களில் பாதிக்கப்பட்ட ெதாட்டிகளை அகற்றிவிட்டு, அலங்கார தாவரங்களைக் கொண்டு மாடங்களில் அலங்காரம் செய்யப்பட்டது. மாடங்களில் உள்ள ஒரு சில தொட்டிகளில் மலர்கள் பாதிக்காமல் உள்ளதாலும், சுற்றுலா பயணிகள் வருகை குறையாமல் இருப்பதாலும், மேலும், சில நாட்களுக்கு இந்த மலர் அலங்காரங்களை வைக்க பூங்கா நிர்வாகம் முடிவு செய்துள்ளது. எனவே, நவம்பர் மாதம் 2வது வாரம் வரை ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் மலர் அலங்காரங்கணை கண்டு ரசித்து செல்லலாம்.