Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

ஆணவக்கொலை செய்யப்பட்ட கவினை ஆய்வாளர் காசிப்பாண்டியன் மிரட்டியதாக வெளியான செய்திக்கு நெல்லை மாநகர காவல் துறை மறுப்பு

நெல்லை: நெல்லையில் ஆணவக்கொலை செய்யப்பட்ட ஐ.டி. ஊழியர் கவினை, ஆய்வாளர் காசிப்பாண்டியன் மிரட்டியதாக வெளியான செய்திக்கு நெல்லை மாநகர காவல் துறை மறுப்பு தெரிவித்துளளது. 'பாளையங்கோட்டை காவல் ஆய்வாளர் காசிப்பாண்டியன், கவினிடம் எந்த சட்ட விரோதமான விசாரணையும் செய்யவில்லை. காசிப்பாண்டியன் மிரட்டியதாக கவினின் தந்தை சந்திரசேகரன் பேட்டியில் கூறியிருப்பது உண்மைக்குப் புறம்பானது' என நெல்லை மாநகர காவல்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

மேலும் வெளியான அறிக்கையில்; இது தொடர்பான வழக்கு புலன் விசாரணையில் இருந்து வரும் நிலையில் ஒரு செய்தி நிறுவனம் தனது சமூக வலைதள பக்கங்களில் "ஆணவக்கொலை கட்ட பஞ்சாயத்து? நெல்லையில் நிகழ்ந்த ஜாதி ஆணவ கொலையில் பஞ்சாயத்து செய்ததாக காவல் ஆய்வாளர் காசி பாண்டியன் மீது புகார் கை, கால்களை உடைத்து விடுவேன் என கூறி மிரட்டிய ஒரே வாரத்தில் கொலை நிகழ்ந்ததாக குற்றச்சாட்டு" என்ற செய்தி வெளியிட்டுள்ளது.