தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அமலாக்கத்துறை அலுவலகத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ் ஆஜர்: ஆன்லைன் சூதாட்ட வழக்கில் திருப்பம்

Advertisement

ஐதராபாத்: சட்டவிரோத ஆன்லைன் சூதாட்ட செயலி விளம்பரப் பணமோசடி தொடர்பாக நடிகர் பிரகாஷ் ராஜிடம் அமலாக்கத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 2023ம் ஆண்டு நவம்பர் மாதம், திருச்சியைச் சேர்ந்த ஜுவல்லர்ஸ் கடை தொடர்பான ₹100 கோடி போலி நிதி நிறுவன மோசடி வழக்கில் நடிகர் பிரகாஷ் ராஜுக்கு அமலாக்கத்துறை அழைப்பாணை அனுப்பியது. அந்த நிறுவனத்தின் விளம்பரத் தூதராக அவர் செயல்பட்ட நிலையில், போலி தங்க முதலீட்டுத் திட்டத்தின் மூலம் முதலீட்டாளர்களை ஏமாற்றியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இது தொடர்பாக, மேற்கண்ட தங்க முதலீட்டுத் திட்டம் சம்பந்தமான நிதிப் பரிவர்த்தனைகள் குறித்து விளக்கம் அளிக்க, கடந்த 2023 டிசம்பர் 5ம் தேதி சென்னையில் ஆஜராகும்படி அவருக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில், சட்டவிரோத ஆன்லைன் சூதாட்ட செயலிகளை விளம்பரப்படுத்தியது தொடர்பான பணமோசடி விசாரணைக்காக, நடிகர் பிரகாஷ் ராஜ் இன்று ஐதராபாத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார். ஜங்லீ ரம்மி போன்ற தளங்களுக்கு ஆதரவளித்ததாக எழுந்த குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் இந்த விசாரணை நடைபெற்றது. தெலங்கானா மற்றும் ஆந்திராவில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கைகளின் அடிப்படையில், பிரகாஷ் ராஜ், ராணா டகுபதி, விஜய் தேவரகொண்டா உள்ளிட்ட பிரபலங்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement