Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad Cements
search-icon-img
Advertisement

பெங்கல் புயல் எதிரொலி; மீனவர்களின் படகுகளுக்கு வழங்கும் மானிய டீசல் விற்பனை தற்காலிகமாக நிறுத்தி வைப்பு!

சென்னை: வங்கக் கடலில் புயல் உருவாகி உள்ளதன் எதிரொலியாக, மீனவர்கள் கடலுக்கு செல்வதைத் தடுக்கும் வகையில் மீன்பிடி படகுகளுக்கான டீசல் மானியம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக மீன்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னை எண்ணூர் நெட்டுக்குப்பம் முதல் திருவான்மியூர் குப்பம் வரை 2,300 செயற்கை இழை படகுகளும், 772 விசைப் படகுகளும் உள்ளன.

இந்தப் படகுகளுக்கு எண்ணூர், ராயபுரம், காசிமேடு ஆகிய பகுதிகளில் உள்ள பெட்ரோல் நிரப்பும் நிலையங்களில் மானிய விலையில் டீசல் வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி, பைபர் படகுகள் மற்றும் செயற்கை இழை படகுகளுக்கு தலா 4 ஆயிரம் லிட்டர் டீசலும், விசைப் படகுகளுக்கு தலா 20 ஆயிரம் லிட்டர் டீசலும் மானிய விலையில் வழங்கப்படுகிறது.

தற்போது, வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில், மீனவர்கள் மீன்பிடிக்க செல்வதைத் தவிர்க்கும் வகையில் படகுகளுக்கு வழங்கும் மானிய டீசல் விற்பனை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை இந்த நடைமுறை தொடரும் என மீன்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.