Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கடலூர் அருகே அறுந்து கிடந்த உயிர் மின் அழுத்த கம்பியை மிதித்த விவசாயி உயிரிழப்பு

கடலூர்: கடலூர் மாவட்டம் மாங்குடி கிராமத்தில் அறுந்து கிடந்த உயர் மின் அழுத்த கம்பியை மிதித்த விவசாயி கஜேந்திரன் உயிரிழந்தார் சிதம்பரம் அருகே காட்டுமன்னார்கோவில் தாலுகாவுக்கு உட்பட்ட வடக்குமாங்குடி கிராமத்தை சேர்ந்தவர் கஜேந்திரன் விவசாயி இவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழைந்தைகள் உள்ள நிலையில் இன்று காலை விவசாயம் செய்யும் வயலுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக வயல்வெளிக்கு மின்மோட்டார் போட சென்ற போது உயர் மின் கம்பி அறுந்து விழுந்தது தெரியாமல் கால்வைத்துள்ளார்.

இதில் மின்சாரம் தாக்கி தூக்கிவீசப்பட்டு சம்பவ இடத்தில் விவசாயி கஜேந்திரன் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் மனைவி மற்றும் உறவினர்கள், பொதுமக்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மாதாந்திர பணிக்காக மின்சாரம் நிறுத்தப்பட்டு பணிகள் நடைபெற்று வந்த நிலையில் உறிய முறையில் மின்வரிய ஊழியர்கள் அதிகாரிகள் அலட்சியமாக பணிபுரித்ததாக கூறப்படுகிறது.

அவர்கள் பணிகளை சரியாக செய்யாததால் தற்பொழுது இந்த விவசாயி உயிரிழந்ததாக கிராமமக்கள் மற்றும் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளார். உயிரிழந்த விவசாயிக்கு உரிய நிர்வாணம் அரசு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று விவசாயி கஜேந்திரன் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக சிதம்பரம் காமராஜர் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.