Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

ரம்பனில் மேக வெடிப்பு ; பஹல்காம் தீவிரவாத தாக்குதல்: பல இடங்களில் சிக்கித் தவிக்கும் சுற்றுலா பயணிகள்

ஜம்மு: ரம்பனில் ஏற்பட்ட மேக வெடிப்பு காரணமாக ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டதைத் தொடர்ந்து நடந்த பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலால், நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் பல இடங்கிலும் சிக்கிக் கொண்டனர்.

ஜம்மு - காஷ்மீர் மாநிலம் ரம்பன் மாவட்டத்தில் கடந்த ஞாயிற்றுக் கிழமை மேக வெடிப்பு ஏற்பட்டதால் பெய்த கனமழையால் சந்தர்கோடியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. ஜம்முவிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கான ஸ்ரீநகருக்குச் செல்லும் பாதை மூடப்பட்டுள்ளது. பலர் முகல் சாலையின் மாற்றுப் பாதையை தேர்ந்து எடுத்தாலும், பெரிய வாகனங்கள் அதைப் பயன்படுத்துவதை காவல்துறை தடை செய்துள்ளது.

இதன் விளைவாக, குழந்தைகள் மற்றும் பெண்கள் உட்பட பலர் பவுனி மற்றும் பூஞ்சில் இரவு முழுவதும் சிக்கிக்கொண்டனர். அவர்களில் பெரும்பாலோர் இரவு முழுவதும் தங்கள் வாகனங்களில் பதுங்கியிருந்தே கழித்தனர். நேற்று காலை அவர்களுக்கு ஸ்ரீநகருக்குப் புறப்பட்டாலும், மணிக்கணக்கில் போக்குவரத்தில் சிக்கிக்கொண்டனர். நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் பயணம் செய்து பலர் ஜம்முவுக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். இதற்கிடையில், பஹல்காம் தீவிரவாத தாக்குதலுடன், ஸ்ரீநகரை அடைந்தவர்களும் அங்கு சிக்கிக்கொண்டனர். அவர்கள் அனைவரும் மீண்டும் திரும்புவதற்கு சில நாட்கள் காத்திருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அவர்களை மீட்கும் பணியில் உள்ளூர் நிர்வாகம் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.