Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

அமராவதி அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட அரசு ஆணை

திருப்பூர்: அமராவதி ஆற்றில் உள்ள முதல் 8 பழைய ராஜவாய்க்கால்களின் பாசனப் பகுதிகளுக்கு நாளை முதல் மார்ச் 30ம் தேதி வரை 21 நாட்களுக்கு 300 கன அடி வீதம் தண்ணீர் திறக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் இதுகுறித்து வெளியான அறிக்கையில்;

"திருப்பூர் மாவட்டம், அமராவதி ஆற்றில் உள்ள முதல் எட்டு பழைய இராஜவாய்க்கால்களின் (இராமகுளம், கல்லாபுரம், குமரலிங்கம், சர்க்கார் கண்ணாடிபுத்தூர், சோழமாதேவி. கணியூர், கடத்தூர் மற்றும் காரத்தொழுவு) பாசனப்பகுதிளுக்கு 25.02.2025 முதல் 30.03.2025 வரை தகுந்த இடைவெளிவிட்டு 21 நாட்களுக்கு அமராவதி ஆற்று மதகு வழியாக விநாடிக்கு 300 கன அடி வீதம் 544.32 மில்லியன் கன அடிக்கு மிகாமலும் மற்றும் அமராவதி புதிய பாசனப்பகுதிகளுக்கு 25.02.2025 முதல் 20.03.2025 வரை தகுந்த இடைவெளிவிட்டு 10 நாட்களுக்கு அமராவதி பிரதான கால்வாய் வழியாக விநாடிக்கு 440 கன அடி வீதம் 380.16 மில்லியன் கன அடிக்கு மிகாமலும் ஆக மொத்தம் 924.48 மில்லியன் கன அடிக்கு மிகாமல் அமராவதி அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது. இதனால், திருப்பூர் மாவட்டத்திலுள்ள 32770 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.