தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சிறுவனுக்கு பாலியல் தொல்லை: சினிமா துணை நடிகர் போக்சோவில் கைது

Advertisement

பூந்தமல்லி: சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சினிமா துணை நடிகரை போலீசார் போக்சோவில் கைது செய்துள்ளனர். சென்னை மதுரவாயலை சேர்ந்த 9ம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுவனின் பெற்றோர் நேற்று முன்தினம் விருகம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தனர். அதில், பள்ளி விடுமுறை நாளில் ஆலப்பாக்கத்தில் உள்ள ஒரு பூங்காவிற்கு தனது மகன் விளையாட செல்வது வழக்கம். அப்போது, அங்கிருந்த இளைஞர் ஒருவர், எனது மகனை தனியாக அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என கூறியிருந்தார்.

அதன்பேரில், அந்த பூங்காவில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்டது மதுரவாயல், ஆலப்பாக்கத்தை சேர்ந்த அரி (21), என தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் பூங்காவில் விளையாடி கொண்டிருந்த சிறுவனை, அரி அழைத்துச் சென்று, தான் சினிமா துறையில் பணிபுரிந்து வருவதாகவும், பல்வேறு நடிகர்களுடன் பழக்கம் இருப்பதாகவும் கூறி அவர்களுடன் சேர்ந்து எடுத்து கொண்ட போட்டோக்களை தனது செல்போனில் காண்பித்துள்ளார்.

பின்னர் அந்த நடிகர்களைப் பார்க்க அழைத்துச் செல்வதாக சிறுவனை தனியாக அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து அரியை போலீசார் நேற்று கைது செய்தனர். இவர் சினிமா துறையில் துணை நடிகராக நடித்து வருவதும் பூங்காவிற்கு வரும் சிறுவர்களை இது போன்ற சினிமா பிரபலங்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை காண்பித்து பாலியல் தொந்தரவு செய்தது தெரியவந்தது. இதையடுத்து அரி மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிந்து கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement