தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பாலியல் தொழிலில் ஈடுபடுவதாக அவதூறு திருநங்கை மந்த்ரா மீது நடவடிக்கை: 300க்கும் மேற்பட்ட திருநங்கைகள் கமிஷனர் அலுவலகத்தில் புகார்

Advertisement

சென்னை: திருநங்கைகள் அமைப்பு தலைவிகள் சிலர் சக திருநங்கைகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி பணம் சம்பாதிப்பதாக யூடியூப் சேனல்களில் அவதூறாக பேசி வரும் திருநங்கை மந்த்ரா மீது நடவடிக்கை எடுக்க கோரி 300க்கும் மேற்பட்ட திருநங்கைகள் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் தேசிய திருநங்கையர் கூட்டமைப்பு மற்றும் சென்னை மாவட்ட திருநங்கைகள் அமைப்பு சார்பில் 300க்கும் மேற்பட்ட திருநங்கைகள் கூட்டாக நேற்று புகார் மனு அளித்தனர்.

அதில், சென்னையில் 21 ஜமாத்துகள் தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட திருநங்கைகள் உள்ளனர். அதில் ஆலந்தூர் பகுதியில் உள்ள மந்த்ரா என்ற திருநங்கை சில நாட்களாக யூடியூப் சேனல்களில், சென்னையில் உள்ள 21 ஜமாத்துகளின் திருநங்கை தலைவிகள், தங்களது அமைப்பில் உள்ள திருநங்கைகளை கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபட வலியுறுத்துவதாகவும், அதன் மூலம் ஒவ்வொரு மாதமும் லட்சக்கணக்கில் பணம் வசூலித்து வருவதாகவும் தவறான கருத்தை பேசி வருகிறார்.

இதுகுறித்து திருநங்கைகள் அமைப்பு சார்பில் வேப்பேரி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின்படி அவதூறாக பேசிய திருநங்கை மந்த்ரா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால் இதுவரை மந்த்ராவை போலீசார் கைது செய்யவில்லை. இதற்கிடையே மீண்டும் மந்த்ரா சென்னையில் உள்ள திருநங்கைகள் தலைவிகள் குறித்து யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில், திருநங்கைகளை தவறாக வழிநடத்தி பணம் சம்பாதிப்பதாக தொடர்ந்து பேசி வருகிறார். எனவே திருநங்கை மந்த்ரா மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்து இருந்தனர். புகாரின்படி நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு உயர் காவல்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Advertisement

Related News