தொடர் விடுமுறையால் கூட்டம் அலைமோதல் திருப்பதியில் 20 மணிநேரம் காத்திருந்து சுவாமி தரிசனம்: 2 கி.மீ. தூரம் நீண்ட பக்தர்கள் வரிசை
Advertisement
அதன்படி நேற்றுமுன்தினம் 67,785 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 27,753 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். கோயில் உண்டியலில் ரூ.2.38 கோடி காணிக்கை செலுத்தினர். தொடர் விடுமுறை மற்றும் சனிக்கிழமையையொட்டி நேற்று அதிகாலை முதல் பக்தர்கள் வருகை மேலும் அதிகரித்தது. இதனால் வைகுண்டம் கியூ காம்பளக்ஸ் அறைகள் முழுவதும் நிரம்பியுள்ளது. பக்தர்கள் சுமார் 2 கிலோ மீட்டர் தூரமுள்ள ஏடிஜிஎச் கட்டிடம் வரை நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.
Advertisement