செந்தில் பாலாஜி மீதான அமலாக்கத்துறை வழக்கில் வரும் 22ம் தேதி குற்றச்சாட்டு பதிவு: அமர்வு நீதிமன்றம் உத்தரவு
Advertisement
அதில், வங்கி தொடர்பான அசல் ஆவணங்களுக்கும், அமலாக்கத்துறை வழங்கிய ஆவணங்களுக்கும் வேறுபாடுகள் இருப்பதால், தங்களுக்கு வழங்கிய ஆவணங்களை தடய அறிவியல் துறை ஆய்வுக்கு அனுப்பி அந்த ஆவணங்களின் உண்மை தன்மையை ஆராய உத்தரவிட வேண்டும் என்றும் விடுவிக்க கோரிய மனு மீது மீண்டும் வாதிட அனுமதிக்க வேண்டும் என்றும் கோரியிருந்தார்.
இந்த மனுக்கள் நீதிபதி அல்லி முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, வழக்கிலிருந்து விடுவிக்க கோரிய மனுவையும், அசல் ஆவணங்கள் கோரிய மனுவையும், ஆவணங்களை தடய அறிவியல் துறை ஆய்வுக்கு அனுப்ப உத்தரவிட கோரிய மனுவையும் தள்ளுபடி செய்தார். மேலும், இந்த வழக்கில் வரும் 22ம் தேதி குற்றச்சாட்டு பதிவு செய்ய உள்ளதால் அன்றைய தினம் செந்தில் பாலாஜியை நேரில் ஆஜர்படுத்துமாறும் நீதிபதி உத்தரவிட்டார்.
Advertisement