தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சென்செக்ஸ் கடும் வீழ்ச்சி பங்குச்சந்தையில் ஒரே நாளில் ரூ.7 லட்சம் கோடி இழப்பு: ரூபாய் மதிப்பும் தொடர்ந்து சரிவு

மும்பை: பங்குச்சந்தையில் நேற்று ஒரே நாளில் முதலீட்டாளர்கள் ரூ.7.12 லட்சம் கோடியை இழந்தனர். இந்திய பங்குச்சந்தையில் தொடர்ந்து ஏற்ற இறக்கம் காணப்பட்டு வருகிறது. கடந்த வாரத்தில் தொடர்ந்து 2 நாட்கள் பங்குச்சந்தைகள் ஏற்றம் கண்டன. வாரத்தின் முதல் நாளான நேற்று பங்குச்சந்தைகள் சரிவுடனேயே துவங்கின. மும்பை பங்குச்சந்தை குறியீடு சென்செக்ஸ் 85,625 புள்ளிகளில் துவங்கியது. 84,875 புள்ளிகள் வரை சரிந்தது. வர்த்தக முடிவில் 610 புள்ளிகள் வரை சரிந்து 85,103 ஆக இருந்தது. இதுபோல் தேசிய பங்குச்சந்தை குறியீடான நிப்டி, 226 புள்ளிகள் சரிந்து 25,960 புள்ளிகளானது.

Advertisement

இதன் காரணமாக மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவன பங்குகளின் மதிப்பு ரூ.7,12,514.68 கோடி சரிந்து, ரூ.4,64,19,108.91 கோடி ஆனது. அமெரிக்க பெடரல் வங்கி வட்டி மாற்றம் தொடர்பாக முக்கிய முடிவை எடுக்க உள்ளது. மேலும், இந்திய பங்குச்சந்தையில் இருந்து வெளிநாட்டு முதலீட்டாளர்கள் முதலீடுகளை திரும்பப் பெற்றனர். லாப நோக்கத்தில் பங்குகளை முதலீட்டாளர்கள் விற்கத் துவங்கினர். இதன் காரணமாக பாரத் எலெக்ட்ரானிக்ஸ், டாடா ஸ்டீல், பஜாஜ் பைனான்ஸ்,அதானி போர்ட், பவர் கிரிட், எல் அண்ட் டி உள்ளிட்ட நிறுவன பங்குகள் சரிவை சந்தித்தன. ரூபாய் மதிப்பு மீண்டும் ரூ.90 ஐ தாண்டி, ரூ.90.09 ஆனது.

Advertisement