தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சீமான் அம்பியாக இருப்பார்... திடீரென அந்நியனாக மாறுவார்... பிரேமலதா கடும் தாக்கு

Advertisement

திருமயம்: பெரியார் குறித்து சர்ச்சையாக பேசியது பற்றி கருத்து சொல்ல முடியாது. சீமான் அம்பியாக இருப்பார்... திடீரென அந்நியனாக மாறுவார்.... என்று பிரேமலதா கடுமையாக தாக்கியுள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள வெங்களூர் கிராமத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் ஜகபர்அலி குவாரி உரிமையாளர்களால் லாரி ஏற்றி கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து திருமயம் தாசில்தார் அலுவலகம் அருகே நேற்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தலைமையில் 500க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு பின் பிரேமலதா நிருபர்களுக்கு அளித்த பேட்டி: பெரியார் குறித்து சீமான் சர்ச்சையாக பேசியது பற்றி கருத்து சொல்ல முடியாது. இதுபற்றி அவர் கிட்ட போய் தான் கேட்கனும். சீமான் அம்பியாகவும் இருப்பார்...திடீரென்று அந்நியனாகவும் மாறுவார்... அதனால் அவரை கணக்கில் எடுத்து கொள்ள கூடாது என்று ஏற்கனவே நான் கூறியுள்ளேன். இறந்து போன தலைவர்களை பற்றி நாம் யாரும் பேசக்கூடாது. அவர்கள் வாழ்ந்து சரித்திரம் படைத்து விட்டு சென்று விட்டனர்.

இருக்கிறவர்களை பற்றியும், இருக்கும் அரசியல் பற்றியும் பேசுவதை விட்டுவிட்டு இறந்தவர்களை பற்றி ஏன் பேசுகிறீர்கள் என்று நான் பலமுறை கண்டித்துள்ளேன். அதில் எனக்கு எந்த உடன்பாடும் கிடையாது. விஜய் வெளியே வரவேண்டும், அவர் மக்களுக்கு செய்ய வேண்டிய நிறைய பணிகள் உள்ளது. மாட்டின் கோமியம் குறித்து பெரிய விவாதம் நடந்தது. என் கருத்தை பொறுத்த வரையில் கோமியம் என்பது இந்துக்களால் புனிதமாக பார்க்கக்கூடிய ஒன்று. இது அனைவருக்கும் தெரியும். உங்களுக்கு பிரியப்பட்டால் நீங்கள் அதனை குடியுங்கள் இல்லையென்றால் குடிக்காதீர்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

Related News