சீமானால் ஆபத்து என பாதுகாப்பு கேட்ட திருச்சி சூர்யாவுக்கு போலீஸ் பாதுகாப்பு தேவையில்லை: ஐகோர்ட் கிளையில் அரசு தகவல்
இதனால் சீமான் என் மீது பழி வாங்கும் நோக்கோடு செயல்படுகிறார். அக்கட்சியைச் சேர்ந்த சாட்டை துரைமுருகன் என்பவரும் எனக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். என் மீது தாக்குதல் நடத்த இவர்கள் திட்டம் தீட்டியுள்ளனர். எனவே, எனக்கும், குடும்பத்தினருக்கும் உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்குமாறு உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார். இந்த மனு நீதிபதி நிர்மல்குமார் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் திருவடிக்குமார் ஆஜராகி, ‘‘தற்போதைய சூழலில் சூர்யாவுக்கு போலீசார் பாதுகாப்பு தேவையில்லை. அனைவருக்கும் போலீஸ் பாதுகாப்பு வழங்க முடியாது. பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும்’’ என்றார். இதே போல் சாட்டை துரைமுருகன் தரப்பில், சூர்யாவின் மனுவிற்கு எதிர்ப்பு தெரிவித்து இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, மனுவிற்கு திருச்சி காவல்துறை தரப்பில் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார்.