தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அறிவியல்பூர்வமற்ற பாலத்துக்கு எதிர்ப்பு: பொதுமக்கள் போராட்டம்

Advertisement

தாவணகெரே: அறிவியல்பூர்வமற்ற முறையில் கட்டப்படும் பாலத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தாவணகெரே மாவட்டம், ஹலேகுந்தவாடா அருகே தேசிய நெடுஞ்சாலைக்காக கட்டப்பட்டு வரும் பாலம் அறிவியல்பூர்வமற்றது எனக் கூறி, வாகனப் போக்குவரத்து மற்றும் பணியை மறித்து கிராம மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முன்னதாக, நெடுஞ்சாலைக்காக கட்டப்பட்டு வரும் பாலம் அருகே உள்ள சர்வீஸ் சாலையில் கிராம மக்கள் திரண்டனர்.

பின்னர், வாகன போக்குவரத்தை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டு, நடந்து வரும் பாலப் பணியை நிறுத்த வேண்டும் என கோஷமிட்டனர். தகவலறிந்து துணைகோட்ட அலுவலர் சந்தோஷ், தாசில்தார் அஸ்வத் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று, மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரசம் பேசினர். அப்போது, தேசிய நெடுஞ்சாலையில், (என்எச் 48) பழைய குந்தவாடா கிராமத்துக்கு அருகில் செல்கிறது. 6 வழிச்சாலைக்காக புதிய மேம்பாலம் கட்டப்படுகிறது. ஆனால் இங்கு, பன்னிகோடு மற்றும் ஹலேகுந்தவாடாவை இணைக்கும் சாலையை இணைக்கவில்லை.

புதிதாக கட்டப்பட்ட பாலத்தால் கிராமத்துக்கு எந்த பயனும் இல்லை. முன்பு கட்டப்பட்ட பாலமும் அறிவியல்பூர்வமற்றது. இதனால் பல கிராமங்களை இணைக்கும் சாலைகள் பயன்படுத்துவதில் சிக்கல் உள்ளது. பள்ளி மாணவர்களும் சிரமப்பட்டனர். புதிய பாலம் கட்டும்போது பழுதை சரி செய்து தரப்படும் என நெடுஞ்சாலை ஆணையம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. ஆனால், கிராம மக்களின் பரிந்துரைகளை கருத்தில் கொள்ளாமல் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது என சரமாரியாக குற்றம்சாட்டினர். பின்னர் அதிகாரிகள், சம்பந்தப்பட்ட துறையினரிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து மறியலில ஈடுபட்ட கிராம மக்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.

Advertisement

Related News