தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அனைத்து மாவட்டங்களிலும் பள்ளிகளில் ஆய்வு செய்ய 30 பேர் கண்காணிப்பு அதிகாரிகளாக நியமனம்: பள்ளி கல்வித்துறை இயக்குநர் உத்தரவு

Advertisement

சென்னை: அனைத்து மாவட்டங்களின் பள்ளிகளில் ஆய்வுகளை மேற்கொள்ள இயக்குநர்கள் மற்றும் இணை இயக்குநர்கள் என 30 பேர் கண்காணிப்பு அதிகாரிகளை நியமனம் செய்து பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். திருவள்ளூர் பம்மதுகுளம் அரசுப் பள்ளியில் மாணவர் வருகைப் பதிவேட்டில் முறைகேடு நடந்ததாக அதன் தலைமையாசிரியர் மற்றும் அதை கண்காணிக்காத வட்டார கல்வி அலுவலர் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.  விழுப்புரம் கோலியனூர் அருகே அரசு உதவிப்பெறும் பள்ளியிலும் மாணவர்கள் எண்ணிக்கையில் இருந்த குளறுபடியால் அதன் வட்டாரக் கல்வி அலுவலரும், செங்கல்பட்டு முள்ளிப்பாக்கம் அரசுப் பள்ளியில் முறையான தகவல் இன்றி நீண்ட நாட்கள் விடுமுறை எடுத்த ஆசிரியரும் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

இந்நிலையில் 38 மாவட்டங்களிலும், பள்ளிகளில் ஆய்வு செய்ய இயக்குநர்கள் மற்றும் இணை இயக்குநர்கள் என 30 பேர் கண்காணிப்பு அதிகாரிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக, பள்ளிக்கல்வித்துறை செயலாளர் மதுமதி வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: பள்ளிக்கல்வித் துறையின் கீழ் பணியாற்றும் அதிகாரிகள், பள்ளிகளில் ஆய்வு பணிகளை செய்ய வேண்டும். அந்தவகையில் தமிழக பாடநூல் கழக மேலாண்மை இயக்குநர் சங்கர் (புதுக்கோட்டை), ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநில திட்ட இயக்குநர் ஆர்த்தி (செங்கல்பட்டு), பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் கண்ணப்பன் (மதுரை), தொடக்கக் கல்வி இயக்குநர் நரேஷ் (திருவள்ளூர்), தனியார் பள்ளிகள் இயக்குநர் பழனிசாமி (சென்னை) உள்பட 30 அதிகாரிகள் தங்களுக்கான மாவட்டத்தில் ஆய்வுகள் செய்ய வேண்டும்.

மாதம் ஒருமுறை பள்ளிகளில் ஆய்வு செய்து அதன் அறிக்கையை 5ம் தேதிக்குள் தவறாமல் சமர்ப்பிக்க வேண்டும். காலை உணவு திட்டம், மதிய உணவு திட்டம் போன்ற நலத்திட்டங்கள் தொடர்பாக அதிகாரிகள் ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். மாணவர்களின் வருகை விவரங்கள் முறையாக பராமரிக்கப்படுகிறதா என்பது குறித்தும் கண்காணிக்க வேண்டும். பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களின் செயல்பாடுகள், ஆசிரியர்கள், பணியாளர்களின் காலிப்பணியிட விவரங்கள் குறித்து கேட்டறிய வேண்டும். இதுதவிர முதன்மை, மாவட்டக் கல்வி அலுவலகங்களிலும் ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும். அங்கு, அரசு உதவிப்பெறும் பள்ளிகளின் அங்கீகாரம், கல்வி உபகரணங்களின் இருப்பு, தணிக்கை விவரங்களையும் ஆராய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

Related News