தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பள்ளிக்கரணை அருகே வாகனம் மீது கார் மோதல்: பெண் ஐடி ஊழியர் காயம்

Advertisement

வேளச்சேரி: பள்ளிக்கரணை அருகே துரைப்பாக்கம்-பல்லாவரம் ரேடியல் சாலையில் நேற்றிரவு வாகனத்தின் மீது, ஐடி ஊழியர்களை ஏற்றி வந்த கார் மோதி தீப்பிடித்தது. இதில், பெண் ஊழியர் காயமடைந்தார். செங்கல்பட்டு மாவட்டம், சிங்கபெருமாள்கோவில், நேதாஜி தெருவை சேர்ந்தவர் சபரிநாதன் (24).

இவர் தனக்கு சொந்தமான காரை, கூடுவாஞ்சேரி அருகே வெள்ளாஞ்சேரியில் இயங்கி வரும் ஒரு தனியார் ஐடி நிறுவனத்தில் ஊழியர்களை ஏற்றி செல்வதற்கு ஒப்பந்த அடிப்படையில் ஓட்டி வருகிறார். நேற்றிரவு வழக்கம் போல் ஐடி நிறுவனத்தில் இருந்து பள்ளிக்கரணையை சேர்ந்தவர்களை காரில் ஏற்றி கொண்டு வந்தார். 10 மணியளவில் பள்ளிக்கரணை அருகே துரைப்பாக்கம்-பல்லாவரம் ரேடியல் சாலையில் சென்றபோது பெரிய கோவிலம்பாக்கம் அருகே முன்னால் சென்ற வாகனத்தின்மீது மோதியது.

இதில் கார் தீப்பிடித்து எரிந்தது. உடனே காரை சாலையோரமாக நிறுத்தினார். அனைவரும் அலறியடித்து கீழே இறங்கினர். இதில், காரில் இருந்த பள்ளிக்கரணையை சேர்ந்த சினேகாவுக்கு லேசான தீக்காயம் ஏற்பட்டது. அவரை அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். மற்றவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

தகவலறிந்து பள்ளிக்கரணை ரோந்து எஸ்ஐ மணி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவ்வழியே சென்ற தண்ணீர் லாரிகளை நிறுத்தி அதன் மூலம் தீயை அணைத்தனர். புகாரின்பேரில் பள்ளிக்கரணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement