தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சேலம் மாவட்டத்தில் 713 மில்லி மீட்டர் மழை: சாரல் மழையால் வெறிச்சோடிய சாலைகள்

Advertisement

சேலம்: தமிழகத்தில் பெஞ்சல் புயல் தாக்கத்திற்கு பிறகு மாநிலம் முழுவதும் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக மழைப்பொழிவு குறைந்து காணப்பட்டது. ஒரு சில மாவட்டங்களில் மட்டும் மழை பெய்து வந்தது. இந்நிலையில் தற்போது தென்மேற்கு வங்கங்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. அதன்படி, நேற்று அதிகாலையில் இருந்தே சேலம் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வந்தது. இதனால் நேற்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் மாவட்டம் முழுவதும் சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் அனைத்து பள்ளிகளுக்கும் இன்று 2வது நாளாக விடுமுறை அறிவிக்கப்பட்டது. சேலம் மாநகரை பொறுத்த வரை அஸ்தம்பட்டி, அம்மாபேட்டை, புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், கிச்சிப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளிலும் மழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி உள்ளது. மழை காரணமாக அலுவலக பணிக்கு செல்வோர், கல்லூரி மாணவ, மாணவிகள் குடை பிடித்தும், ரெயின் கோட் அணிந்தவாறும் சென்றனர். தொடர்மழை காரணமாக சாலைகளில் பயணிப்போர் எண்ணிக்கையும் பெருமளவு குறைந்து காணப்பட்டது.

குறிப்பாக எப்போதும் பரபரப்பாக காணப்படும் சேலம் கலெக்டர் அலுவலக சாலையில வாகனங்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. அதேபோல் சேலம் ஆற்றோர காய்கறி மார்க்கெட், கடைவீதி உள்ளிட்ட பகுதிகளிலும் மழையால் வியாபாரம் பாதிக்கப்பட்டது. சேலம் மாவட்டத்தில் நேற்று காலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி பதிவான மழை அளவு (மில்லிமீட்டரில்): சேலம் 16 , ஏற்காடு 42, வாழப்பாடி 56, ஆணைமடுவு 58, ஆத்தூர் 67, கெங்கவல்லி 75, தம்மம்பட்டி 88, ஏத்தாப்பூர் 63, கரியகோவில் 55, வீரகனூர் 85, நத்தக்கரை 32, சங்ககிரி 15, இடைப்பாடி 15, மேட்டூர் 13, ஓமலூர் 14, டேனிஷ்பேட்டை 17 என மாவட்டம் முழுவதும் 713 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.

Advertisement