சபரிமலை கோயிலில் குவிந்த பக்தர்கள்
Advertisement
அதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு சித்திரை ஆட்டத்திருநாள் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதை முன்னிட்டு சபரிமலையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்காக குவிந்திருந்தனர். தந்திரி பிரம்மதத்தன் முன்னிலையில் லட்சார்ச்சனை உள்பட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து இரவு 10 மணிக்கு கோயில் நடை சாத்தப்பட்டது.
மீண்டும் மண்டலகால பூஜைகளுக்காக வரும் 15ம் தேதி சபரிமலை கோயில் நடை திறக்கப்படும்.
Advertisement