தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சபரிமலையில் அரசு பஸ்சில் தீ பிடித்ததால் பரபரப்பு: பக்தர்கள் நூலிழையில் உயிர் தப்பினர்

திருவனந்தபுரம்: சபரிமலை நேற்று இரவு கேரள அரசு பஸ்சில் திடீரென தீ பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் 50க்கும் மேற்பட்ட பக்தர்கள் மயிரிழையில் உயிர் தப்பினர். சபரிமலையில் நிலக்கல்-பம்பை இடையே 24 மணிநேரமும் கேரள அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. நிலக்கல்லில் வாகனங்களை நிறுத்திவிட்டு இந்த பஸ்களில் தான் பக்தர்கள் பம்பை சென்று திரும்ப வேண்டும். நேற்று இரவு சுமார் 10 மணியளவில் தரிசனம் முடிந்த பக்தர்கள் பம்பையில் இருந்து நிலக்கல்லுக்கு கேரள அரசு பஸ்சில் புறப்பட்டனர். இந்த பஸ்சில் 50க்கும் மேற்பட்டோர் இருந்தனர்.

Advertisement

அட்டத்தோடு பகுதிக்கு அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென பஸ்சின் பின்புற டயரில் தீப்பிடித்தது. அதைப் பார்த்த பக்தர்கள் அலறினர். இதனால் அதிர்ச்சியடைந்த டிரைவர் பஸ்சை நிறுத்தினார். உடனடியாக பக்தர்கள் அனைவரும் பஸ்சிலிருந்து இறங்கி ஓடினர். நிமிட நேரத்தில் பஸ்சின் பின்புறம் முழுவதும் எரிந்தது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை மேலும் பரவ விடாமல் அணைத்தனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதன் பிறகு வேறு ஒரு பஸ்சில் பக்தர்கள் அனைவரும் நிலக்கல்லுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Advertisement

Related News