தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சபரிமலையில் கொடிமரத்திற்கு கிடைத்த தங்கத்திலும் முறைகேடு நடிகர்கள் மோகன்லால், சுரேஷ்கோபி உள்பட 27 பேரிடம் விசாரணை: விஜிலென்ஸ் முடிவு

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் பதிக்கப்பட்டிருந்த தங்கத் தகடுகளில் இருந்து தங்கம் திருடப்பட்ட பரபரப்பு அடங்குவதற்குள் அபிஷேக நெய் விற்பனையிலும் லட்சக்கணக்கில் மோசடி நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

Advertisement

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் சபரிமலையில் சில வருடங்களுக்கு முன் அமைக்கப்பட்ட புதிய கொடிமரத்திற்காக பக்தர்களிடம் இருந்து பெறப்பட்ட தங்கத்திலும் மோசடி நடந்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்தி ஒரு மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய விஜிலென்சுக்கு கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதைத் தொடர்ந்து விஜிலன்ஸ் அதிகாரிகள் உடனடியாக விசாரணையை தொடங்கினர். பிரபல மலையாள நடிகர்களான மோகன்லால், சுரேஷ்கோபி, இவரது மகனும், நடிகருமான கோகுல், பிரபல டைரக்டரும் நடிகருமான ரஞ்சி பணிக்கர் உள்பட 27 பேர் கொடிமரத்திற்காக தங்கம் காணிக்கையாக கொடுத்துள்ளனர். சினிமா துறையில் இருந்து மட்டும் 8 பேர் தங்கம் கொடுத்துள்ளனர். தேவசம் போர்டின் பதிவேட்டில் குறிப்பிடப்படவில்லை. பெயர்களுக்கு பதிலாக பக்தன் என்று மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. தங்கம் நன்கொடையாக கொடுத்தவர்களுக்கு ரசீதும் கொடுக்கப்படவில்லை. இதைத் தொடர்ந்து மோகன்லால் உள்பட 27 பேரிடமும் எவ்வளவு தங்கம் கொடுத்தார்கள் என விசாரணை நடத்த விஜிலன்ஸ் தீர்மானித்துள்ளது.

Advertisement

Related News