தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஊரக வளர்ச்சித் துறை சார்பில் 934 பண்ணை குட்டை பணிகள் தீவிரம்: கலெக்டர் ஆய்வு

Advertisement

திருவள்ளூர்: சோழவரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அலமாதி ஊராட்சி பகுதியில் ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ் பண்ணை குட்டை பணிகள் நடைபெற்று வருவதை கலெக்டர் பிரபுசங்கர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் எல்லாபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் 126 பண்ணை குட்டை பணிகள் நடந்து வருகின்றன. இதேபோல் கும்மிடிபூண்டி ஊராட்சி ஒன்றியத்தில் 152, கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் 61, மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியத்தில் 152, பள்ளிப்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் 36, பூந்தமல்லி ஊராட்சி ஒன்றியத்தில் 12, பூண்டி ஊராட்சி ஒன்றியத்தில் 99, ஆர்.கே.பேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் 78, சோழவரம் ஊராட்சி ஒன்றியத்தில் 80, திருத்தணி ஊராட்சி ஒன்றியத்தில் 86, திருவலங்காடு ஊராட்சி ஒன்றியத்தில் 52, திருவள்ளூர் ஊராட்சி ஒன்றியத்தில் 41, வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றியத்தில் 8 என மொத்தம் 934 பண்ணை குட்டைப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பண்ணை குட்டைகளை கலெக்டர் பிரபுசங்கர் நேற்று முன்தினம் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

இந்த பண்ணை குட்டைகள் அமைப்பதன் மூலம் நிலத்தடி நீர்மட்டம் உயரும். மழைக்காலங்களில் பண்ணை குட்டைகள் மூலம் சேமிக்கப்பட்ட நீர் கோடை காலங்களில் பற்றாக்குறையை தீர்க்கும். மேலும், பண்ணை குட்டை மீன் குஞ்சுகளை வளர்த்து பயன்பெறலாம். தற்பொழுது திட்டப்பணி 100 நாள் வேலையாட்கள் கொண்டு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. எனவே, திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த விவசாய பெருங்குடி மக்கள் இத்திட்டத்தினை பயன்படுத்தி பயன்பெற வேண்டும் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.

ஆய்வின்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயக்குமார், ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் செந்தில்குமார், ஊராட்சிகள் உதவி இயக்குநர் பரணி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மாணிக்கம், சாந்தினி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement

Related News