தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இந்தியாவை ஆட்சி செய்ய பிறந்ததாக காங். அரச குடும்பம் நினைக்கிறது: பிரதமர் மோடி விமர்சனம்

Advertisement

சிமூர்: மகாராஷ்டிராவின் சந்திராபூர் மாவட்டத்தில் உள்ள சிமூரில் நடந்த பாஜ தேர்தல் பிரசார பேரணியில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போது பேசிய பிரதமர் மோடி,”காங்கிரஸ் இடஒதுக்கீடுகளால் எரிச்சல் அடைகிறது. 1980களில் ராஜீவ் காந்தி கட்சியை வழிநடத்தியபோது, தலித்துக்கள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் ஆதிவாசிகளுக்கான சிறப்பு உரிமைகள் குறித்து கேள்வி எழுப்பி ஒரு விளம்பரத்தை வெளியிட்டார்.

இந்த பழைய விளம்பரம் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டுள்ளது. இது காங்கிரசின் இடஒதுக்கீடுக்கு எதிரான அணுகுமுறையை பிரதிபலிக்கிறது. உங்கள் ஒற்றுமையை உடைப்பது தான் காங்கிரஸ் கட்சியின் ஆபத்தான விளையாட்டு. ஒரு பழங்குடியின சமூகம் சாதிகளாக பிரிந்தால் அதன் அடையாளமும் வலிமையும் இழக்கப்படும். காங்கிரஸ் கட்சியின் இளவரசர் வெளிநாட்டில் இருந்தபோதே இது குறித்து அறிவித்துள்ளார். அதனால் தான் கூறுகிறேன். காங்கிரஸ் கட்சியின் இந்த சதிக்கு நாம் பலியாக கூடாது.

நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும். நாம் ஒற்றுமையாக இருந்தால் பாதுகாப்பாக இருப்போம். நீங்கள் ஒற்றுமையாக இருக்கவில்லை என்றால் உங்கள் இடஒதுக்கீட்டை காங்கிரஸ் கட்சி பறித்துவிடும். நாட்டை ஆள்வதற்கு பிறந்தோம் என்பது காங்கிரசின் அரச குடும்பத்தின் மனநிலை. சுதந்திரத்திற்கு பிறகு தலித்துக்கள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் ஆதிவாசிகள் முன்னேறுவதற்கு காங்கிரஸ் ஒருபோதும் அனுமதிக்காததற்கு இதுவே காரணமாகும்” என்றார்.

Advertisement

Related News