தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அண்ணாநகர் பகுதியில் ரவுடி நினைவு நாள் சுவரொட்டி: போலீசுடன் வாக்குவாதம் செய்த திருநங்கை உள்பட 2 பேர் கைது

Advertisement

அண்ணாநகர்: ரவுடி நினைவுநாளையொட்டி அண்ணாநகர் பகுதியில் சுவரொட்டி ஒட்டி திருநங்கை உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். சென்னை அண்ணா நகர் அன்னை சத்யா நகர் பகுதியை சேர்ந்தவர் பிரபல ரவுடி ராபர்ட். இவர் சஞ்சனா (30) என்ற திருநங்கையுடன் வசித்தார். கடந்த மாதம் 26ம்தேதி முகமூடி அணிந்து பைக்குகளில் வந்த 6 பேர் கொண்ட கும்பல், ரவுடி ராபர்ட்டை வெட்டி கொலை செய்து தப்பினர். இதுசம்பந்தமாக அமைக்கப்பட்ட தனிப்படையினர் 6 பேரை கைது செய்து விசாரித்தபோது, ‘’ சென்னை அயனாவரத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி லோகுவின் கூட்டாளிகள் சேர்ந்து பழிக்குப்பழியாக ராபர்ட்டை வெட்டி கொலை செய்துள்ளனர்’ என்று தெரியவந்தது.ரவுடி ராபர்டுக்கும் லோகுவுக்கும் இடையே கஞ்சா, போதை மாத்திரைகள் விற்பனை தொடர்பாக ஐந்து வருடமாக தகராறு இருந்துள்ளது.

இந்தநிலையில் ரவுடி ராபர்ட்டின் நினைவுநாள் முன்னிட்டு, ராபர்ட்டின் தம்பி மோசஸ்(25) மற்றும் திருநங்கை சஞ்சனா ஆகியோர் அண்ணாநகர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சுவரில் போஸ்டர் ஒட்டிவருவதாக கிடைத்த தகவல்படி, அண்ணாநகர் போலீசார் சென்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நடவடிக்கை எடுத்து போஸ்டர் ஒட்டக்கூடாது என்று தெரிவித்தபோது மீறி போஸ்டர்கள் ஒட்டியதால் போலீசாருக்கும் ரவுடி கும்பலுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அரசு ஊழியர்களை பணி செய்யவிடாமல் தடுத்ததாக மோசஸ், திருநங்கை சஞ்சனா ஆகியோரை கைது செய்தனர்.

Advertisement

Related News