தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ரோகித்சர்மா, கோஹ்லியின் பார்ம் பற்றி கவலையில்லை: ஆஸ்திரேலியா புறப்படும் முன் காம்பீர் பேட்டி

Advertisement

மும்பை: இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டி கொண்ட பார்டர்-கவாஸ்கர் தொடரில் ஆட உள்ளது. இதற்காக இந்திய அணியின் ஒரு குழுவினர் நேற்று புறப்பட்ட நிலையில் இன்று 2வது குழுவினர் மும்பையில் இருந்து சிட்னி புறப்பட்டனர். முன்னதாக பயிற்சியாளர் கவுதம் காம்பீர் நிருபர்களிடம் கூறியதாவது: ரோகித்சர்மா, விராட் கோஹ்லி பார்ம் பற்றி எனக்கு எந்த கவலையும் இல்லை. அவர்கள் ரன் பசியுடன் இருப்பதை உணர்கிறேன். கடினமான சூழ்நிலையில் அனுபவம் வாய்ந்த வீரர்கள் எங்களிடம் உள்ளனர். ஆஸி. தொடர் இளம் வீரர்களுக்கு முக்கியமானதாக இருக்கும்.

நான் இந்த பணிக்கு வந்தபோது மதிப்புமிக்கதாகவும் அதே நேரத்தில் கடினமானதாகவும் இருக்கும் என தெரியும். ஆனால் நான் எந்த அழுத்தத்தையும் எதிர்கொள்ளவில்லை. நிதிஷ்குமார் சிறந்த வீரர். எதிர்காலத்தில் முக்கிய வீரராக திகழ்வார். நாங்கள் சிறந்த வீரர்களை தேர்வு செய்துள்ளோம். டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகளை பார்க்கவில்லை. பார்டர்-கவாஸ்கர் தொடரில் முழுமையாக கவனம் செலுத்தி அதில் வெற்றிபெறுவதிலேயே உள்ளது. ரோகித்சர்மா முதல் டெஸ்ட்டில் ஆடுவது பற்றி இன்னும் உறுதிபடுத்தப்படவில்லை. அவர் ஆடவில்லை என்றால் பும்ரா வழிநடத்துவார். ரோகித் இல்லாவிட்டாலும் அபிமன்யூ ஈஸ்வரன், கே.எல்.ராகுல் உள்ளனர். ராகுலை முதல் 6 இடத்தில் எந்த வரிசையிலும் களம் இறங்கமுடியும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

Related News