ரோகித்சர்மா, கோஹ்லியின் பார்ம் பற்றி கவலையில்லை: ஆஸ்திரேலியா புறப்படும் முன் காம்பீர் பேட்டி
Advertisement
நான் இந்த பணிக்கு வந்தபோது மதிப்புமிக்கதாகவும் அதே நேரத்தில் கடினமானதாகவும் இருக்கும் என தெரியும். ஆனால் நான் எந்த அழுத்தத்தையும் எதிர்கொள்ளவில்லை. நிதிஷ்குமார் சிறந்த வீரர். எதிர்காலத்தில் முக்கிய வீரராக திகழ்வார். நாங்கள் சிறந்த வீரர்களை தேர்வு செய்துள்ளோம். டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகளை பார்க்கவில்லை. பார்டர்-கவாஸ்கர் தொடரில் முழுமையாக கவனம் செலுத்தி அதில் வெற்றிபெறுவதிலேயே உள்ளது. ரோகித்சர்மா முதல் டெஸ்ட்டில் ஆடுவது பற்றி இன்னும் உறுதிபடுத்தப்படவில்லை. அவர் ஆடவில்லை என்றால் பும்ரா வழிநடத்துவார். ரோகித் இல்லாவிட்டாலும் அபிமன்யூ ஈஸ்வரன், கே.எல்.ராகுல் உள்ளனர். ராகுலை முதல் 6 இடத்தில் எந்த வரிசையிலும் களம் இறங்கமுடியும். இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement