தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சாலை வசதி இல்லாததால் கர்ப்பிணியை டோலி கட்டி தூக்கி வந்த அவலம்: வரும் வழியில் குழந்தை பிறந்தது

Advertisement

திருமலை: சாலை வசதி இல்லாததால் 3 கிமீ தூரம் கர்ப்பிணியை டோலி கட்டி மலைகிராம மக்கள் தூக்கி வந்தனர். வரும் வழியில் அவருக்கு குழந்தை பிறந்தது. ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டத்தில் ரெகபுனகிரி மலை கிராமம் உள்ளது. இந்த கிராமத்திற்கு சாலை வசதி இல்லாததால் இங்குள்ள பழங்குடியின மக்கள் சுமார் 3 கிமீ தூரமுள்ள எஸ்.கோட்டா அரசு மருத்துவமனைக்கும், பல்வேறு தேவைகளுக்கும் நகர்ப்புற பகுதிக்கு வருவதற்கு மிகவும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக மருத்துவமனைக்கு அவசர உதவிக்காக கர்ப்பிணிகள், முதியவர்கள், விஷக்கடியால் பாதிக்கப்பட்டவர்களை டோலி கட்டி தூக்கிச்செல்லும் அவல நிலை உள்ளது.

இந்நிலையில் நேற்று மலைக்கிராமத்தை சேர்ந்த பங்கி சீதம்மா (30) என்பவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. அவரது கணவர் நரசிங்கராவ் மற்றும் அப்பகுதி மக்கள், டோலி கட்டி அவரை மருத்துவமனைக்கு தூக்கிச்சென்றனர். கரடுமுரடான மலைப்பாதை வழியாக டோலியில் தூக்கி செல்லும்போது திடீரென நடுவழியிலேயே பிரசவம் ஏற்பட்டது. இதில் பங்கி சீதம்மாவுக்கு பெண் குழந்தை பிறந்தது. பின்னர் தாய், குழந்தையை டோலியிலேயே எடுத்துச்சென்று மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.

சந்திரபாபுநாயுடு தலைமையிலான கூட்டணி அரசு ஏற்பட்ட பிறகு ரெகபுனகிரி கிராமத்திற்கு சாலை அமைக்க ரூ.4 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. ஆனால் இப்பணி ஆமை வேகத்தில் நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே சாலைப்பணிகளை விரைவுபடுத்துமாறு ரெகபுனகிரி மலை கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

Related News