தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

குன்னூர் - உதகை இடையே சாலையோரம் வளர்ந்த அபாயகர மரங்களை அகற்ற வேண்டும்

Advertisement

*வாகன ஓட்டிகள் கோரிக்கை

குன்னூர் : குன்னூர் - உதகை தேசிய நெடுஞ்சாலையில் சாலையோரத்தில் வளர்ந்த அபாயகரமான மரங்களை அகற்ற வேண்டும் என வாகன ஓட்டிகள், பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சமூக காடுகள் வளர்க்கும் திட்டத்தின் கீழ் பல்வேறு பகுதிகளிலும் கற்பூரம், சீகை, பைன் மற்றும் சாம்பிராணி போன்ற மரக்கன்றுகளை வனத்துறையினர் நடவு செய்தனர். குறிப்பாக, வனங்களை ஒட்டியுள்ள பகுதிகளில் உள்ள காலி நிலங்கள் இந்த மரக்கன்றுகளை நடவு செய்யப்பட்டது.

தற்போது இவைகள் நெடுநெடுவென வளர்ந்து நிற்கின்றன. இந்த மரங்களால், ஆண்டு தோறும் பருவமழையின் போது பல்வேறு விபத்துக்கள் மற்றும் போக்குவரத்து பாதிப்பும் ஏற்படுகிறது.

குறிப்பாக, பருவமழை காலங்களில் இந்த மரங்கள் சாலைகளில் விழுந்து போக்குவரத்து பாதிப்பது வாடிக்கையாக உள்ளது. இந்நிலையில், குன்னூரில் இருந்து உதகை செல்லும் சாலையில் அருவங்காடு பகுதியில் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலையோரங்களில் ஏராளமான கற்பூர மரங்கள் உள்ளன. இவைகளில் பெரும்பாலான மரங்கள் சாலையில் சாய்ந்து நிற்கின்றன. தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், இந்த மரங்கள் சாலையில் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவது மட்டுமின்றி, வாகன ஓட்டிகளுக்கு விபத்து அபாயமும் ஏற்பட வாய்ப்புள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து ஜெகதளா கிடங்கு பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் சஜீவன் கூறுகையில், ‘‘காணிக்கராஜ் நகர் முதல் பாய்ஸ்கம்பெனி வரை ஏராளமான கற்பூர மரங்கள் சாலையோரங்களில் அபாயகரமான முறையில் உள்ளது. தற்போது வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ளது. இதற்கிடையே ஆபத்து ஏற்படக்கூடிய இடங்களை அறிந்து, மரத்தை அகற்றாததால் கடந்த 2-ம் தேதி ராணுவ மையத்தில் நுழைவுவாயிலின் முன் காரில் மரம் விழுந்து ஓட்டுநர் உயிரிழந்தார்.

அதனால் இவ்வாறு உள்ள அபாயகரமான மரங்களால், வாகனங்களில் விபத்து ஏற்படவுள்ளது. குறிப்பாக சுற்றுலா பயணிகள் அதிகளவில் பயன்படுத்தக்கூடிய இந்த சாலையில் அசம்பாவிதங்கள் ஏற்படுவதற்குள் உடனடியாக நெடுஞ்சாலைத்துறையினர் அபாயகர மரங்களை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்’’ என தெரிவித்தார்.

Advertisement

Related News