Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

குடியிருப்புகளுக்கு அருகில் விவசாய நிலத்தில் மின்வேலி அமைப்பு: கிராம மக்கள் எதிர்ப்பு

திருத்தணி: திருத்தணி அருகே குடியிருப்புகளின் அருகில் ஒரு தனியார் விவசாய நிலத்தில் மின்வேலி அமைக்கப்பட்டு உள்ளது. இதற்கு அப்பகுதி கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். திருத்தணி அருகே கார்த்திகேயபுரம் கிராமத்தில் சுமார் 150க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இங்கு குடியிருப்புகளுக்கு அருகே பாஸ்கரன் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலம் உள்ளது. இந்நிலத்தில் பயிரிடப்படாத காலத்தில் அப்பகுதி மக்களுக்கு பொது பாதையாக பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, தனக்கு சொந்தமான விவசாய நிலத்தை சுற்றிலும் கடந்த சில நாட்களுக்கு முன் பாஸ்கரன் மின்வேலி அமைத்துள்ளார். அவரது நிலத்தில் மின்வேலி அமைக்கப்பட்டு உள்ளதால், அதன் வழியே சென்று வருவதற்கும் விளையாடுவதற்கும் அப்பகுதி குழந்தைகள் உள்பட கிராம மக்கள் கடும் அச்சமடைந்தனர்.

இக்கிராமத்தில் குடியிருப்புகளுக்கு அருகில் உள்ள விவசாய நிலத்தில் ஒரு தனியார் மின்வேலி அமைப்பதற்கு அக்கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். எனினும், மக்களின் எதிர்ப்பை நில உரிமையாளர் பாஸ்கரன் அலட்சியப்படுத்தி வருகிறார். இதுகுறித்து மின்வாரிய அதிகாரி ஒருவர், அந்நிலத்தின் உரிமையாளர் பேட்டரி மூலம் மின்சாரத்தை பயன்படுத்தி வேலி அமைத்துள்ளதாக தெரிவித்தார். எனினும், அந்நிலத்தின் வழியே செல்லும் கோழி, ஆடு, மாடு உள்பட பல்வேறு கால்நடைகள் மின்வேலியில் சிக்கி இறக்கின்றன. மேலும், அங்கு வசிக்கும் மக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் மின்வேலி அமைப்பதற்கு யார் அனுமதி கொடுத்தனர். இதுகுறித்து மாவட்ட கலெக்டர் நேரில் ஆய்வு செய்து, மின்வேலியை அகற்றுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் வலியுறுத்துகின்றனர்.