தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மைக்கா மவுண்ட், சிவசண்முக நகரில் சாலை வசதி ஏற்படுத்த கோரிக்கை

கூடலூர் : நீலகிரி மாவட்டம் கூடலூர் நகராட்சிக்கு உட்பட்டது 2வது வார்டு மைக்கா மவுண்ட், மற்றும் 8வது வார்டு சிவசண்முக நகர்.இங்கு 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. தேவர் சோலை செல்லும் சாலையோர பள்ளத்தாக்கில் இந்த பகுதி அமைந்துள்ளது.

Advertisement

பிரதான சாலையில் இருந்து குடியிருப்பு பகுதிகளுக்குள் செல்லும் நடைபாதைகள் சுமார் 150 மீட்டருக்கும் அதிகமான தூரம் வரை செங்குத்தான நிலையில் அமைக்கப்பட்டுள்ளன. பாரம் கொண்டு செல்பவர்கள், மாற்றுத்திறனாளிகள், நோயாளிகள், வயதானோர் இதனை சிரமப்பட்டு பயன்படுத்தி வருகிறார்கள். இதனால், இணைப்பு சாலை அமைத்து தரக்கோரி பல முறை கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக, நகராட்சி சார்பில் கடந்த சில வருடங்களுக்கு முன் கூடலூர் சுங்கம் ரவுண்டனா பகுதி வழியாக தாலுகா அலுவலகம் செல்லும் சாலையில் இருந்து பிரிந்து சிவ சண்முக நகர் செல்லும் வகையில் சாலை அமைக்க ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அதன்பின், அப்பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதனை உரிய முறையில் ஆய்வு செய்து இப்பகுதிக்கு சாலை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேபோல், மைக்கா மவுண்ட் பகுதியில் தாழ்வான பகுதியில் வசிக்கும் குடியிருப்பு வாசிகள் பயன் பெறும் வகையில் தேவர் சோலை சாலையில் இருந்து மைக்கா மவுன்ட் தாழ்வான பகுதிகளுக்கு சாலை அமைக்க இங்குள்ள நடைபாதையை அகலப்படுத்தி சாலையை விரிவுபடுத்த முடியும்.

இதன்மூலம், இப்பகுதிகளில் உள்ளவர்கள் ஆட்டோ மற்றும் சிறிய ரக வாகனங்களை தங்களது பகுதிகளுக்கு இயக்கி பயன்பெற முடியும். எனவே, கடந்த பல வருட காலமாக தங்கள் பகுதிக்கு சாலை வசதி செய்து தர வேண்டும் என்று கோரிக்கையை நிறைவேற்றித் தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement