தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அகில இந்திய குடியரசு தின என்.சி.சி முகாமில் நடைபெற்ற திறன் போட்டிகளில் வெற்றி பெற்ற என்.சி.சி மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார் துணை முதலமைச்சர்

Advertisement

சென்னை: தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (4.2.2025) சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற விழாவில், டெல்லியில் நடைபெற்ற அகில இந்திய குடியரசு தின என்.சி.சி முகாமில் நடைபெற்ற திறன் போட்டிகளில் வெற்றி பெற்ற என்.சி.சி மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத்தொகை பரிசுகளையும், தமிழ்நாடு அளவில் சிறப்பாக செயல்பட்ட கோயம்புத்தூர் குழும தலைமையகத்திற்கு முதலமைச்சரின் பதாகையும் வழங்கினார்.

முன்னதாக சென்னை கலைவாணர் அரங்கில் தேசிய மாணவர் படை (என்.சி.சி) மாணவ, மாணவிகள் அமைத்த கண்காட்சியை பார்வையிட்டார். இந்த கண்காட்சியில் தேசிய மாணவர் படை மாணவ, மாணவிகள் அகில இந்திய, சர்வதேச அளவிலான துப்பாக்கிச் சுடும் போட்டிகளில் பங்கேற்பதற்காக தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டுள்ள அதிநவீன ரக துப்பாக்கியின் திறன் மற்றும் செயல்பாடு குறித்து தேசிய மாணவர் படை மாணவியின் விளக்கத்தை கேட்டறிந்தார்.

மேலும் விதைப்பந்துகள் மூலம் மலைப்பகுதியில் பசுமைப்பரப்பை அதிகரிக்கச் செய்யும் வகையில் தேசிய மாணவர் படையின் சமூகப் பணிகள் குறித்தும் கேட்டறிந்தார். தொடர்ந்து கலைவாணர் அரங்கின் முன், டெல்லியில் நடைபெற்ற அகில இந்திய குடியரசு தின என்.சி.சி முகாமில் பங்கேற்ற தமிழ்நாட்டின் தேசிய மாணவர் படை (என்.சி.சி) அலுவலர்கள் மற்றும் மாணவ மாணவிகளுடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆற்றிய உரை; "தேசிய மாணவர் படையினுடைய Chief Minister's Rally மற்றும் Republic Day Contingent-ல் பங்கேற்ற தமிழ்நாடு NCC குழுவுக்கான பாராட்டு விழாவில் பங்கேற்று உங்கள் முன் உரையாற்றுவதில் மிகுந்த பெருமையும் மகிழ்ச்சியும் அடைகின்றேன்" என உரையாற்றினார்.

Advertisement