தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நாடாளுமன்ற வளாகத்தில் காந்தி, அம்பேத்கர் சிலைகள் அகற்றம்: பழைய கட்டிட புல்வெளிக்கு இடமாற்றம்

Advertisement

புதுடெல்லி: நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி, அம்பேத்கர் சிலைகள் அகற்றப்பட்டுள்ளன. இந்த சிலைகள் பழையகட்டிட புல்வெளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன. 18வது மக்களவை விரைவில் கூட உள்ளது. அப்போது புதிய எம்பிக்கள் பதவி ஏற்பார்கள். இதையடுத்து நாடாளுமன்றம் மற்றும் நாடாளுமன்ற வளாகம் தூய்மைப்படுத்தும் பணி நடந்து வருகிறது. இந்த நிலையில் நாடாளுமன்ற வளாகத்தில் வைத்து இருந்த மகாத்மா காந்தி, அம்பேத்கர், சத்ரபதி சிவாஜி உள்ளிட்டோர் சிலைகள் அகற்றப்பட்டுள்ளன.

அவை அனைத்தும் பழைய நாடாளுமன்ற கட்டிடம் அருகே உள்ள புல்வெளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன. பழங்குடியின தலைவர் பிர்சா முண்டா மற்றும் மகாராணா பிரதாப் சிலைகள் உட்பட அனைத்து சிலைகளும் இப்போது பழைய நாடாளுமன்ற கட்டிடத்திற்கும் நாடாளுமன்ற நூலகத்திற்கும் இடையே உள்ள புல்வெளி பகுதியில் அமைக்கப்பட்டுள்ளன. 18வது மக்களவை கூடும் முன்பே இந்த இடமாற்றம் செய்யப்பட்டு இருப்பது கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த முடிவுக்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில்,’ சத்ரபதி சிவாஜி மகாராஜ், மகாத்மா காந்தி மற்றும் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் ஆகியோரின் சிலைகள் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள முக்கிய இடங்களில் இருந்து அகற்றப்பட்டுள்ளது. இது கொடுமையானது’ என்று குறிப்பிட்டு உள்ளார்.

Advertisement

Related News