தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தவாக நிர்வாகி கொலையில் எஸ்ஐக்கு தொடர்பா?தனிப்படை போலீசார் தீவிர விசாரணை

Advertisement

செம்பனார்கோயில்: தவாக நிர்வாகி கொலையில் எஸ்ஐக்கு தொடர்பு உள்ளதா? என தனிப்படை போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.புதுச்சேரி மாநிலம், காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு மெயின்ரோடு பகுதியை சேர்ந்தவர் மணிமாறன் (32). தவாக காரைக்கால் மாவட்ட செயலாளராக இருந்தார். கடந்த 2021ல் காரைக்கால் மாவட்ட பாமக முன்னாள் செயலாளர் தேவமணி கொலை வழக்கில் முதல் குற்றவாளியான மணிமாறன், 2 ஆண்டுகள் ஜெயிலில் இருந்து ஜாமீனில் வெளிவந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் மயிலாடுதுறையில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் நடைபெற்ற தவாக கூட்டத்தில் மணிமாறன் பங்கேற்றுவிட்டு காரில் திரும்பியபோது, மயிலாடுதுறை அருகே செம்பனார்கோயில் என்ற இடத்தில் 2 கார்களில் பின் தொடர்ந்தவர்கள், திடீரென மணிமாறனை காரில் இருந்து வெளியே இழுத்து தள்ளி சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இதனிடையே படுகொலை செய்யப்பட்ட மணிமாறனின் சகோதரர் காளிதாசன் கொடுத்த புகாரில், ‘மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன் காவல்நிலையத்தில் பணியாற்றி வரும் எஸ்ஐ, பாமக முன்னாள் செயலாளர் தேவமணியின் உறவினர் ஆவார். அவருக்கு மணிமாறன் படுகொலையில் தொடர்பு இருப்பதாகவும், உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கூறியுள்ளார்.

இதுதொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, மணிமாறனை கொலை செய்தவர்களை பிடிப்பதற்கு 5 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இன்னும் 2 நாட்களில் கொலையாளிகளை பிடித்துவிடுவோம். கொலையாளிகள் 4 பேர் என தெரியவந்துள்ளது. அவர்கள் காரைக்கால் வழியாக புதுச்சேரி சென்று இருக்கலாம். அங்கு ஒரு டிஎஸ்பி தலைமையில் போலீசார் விரைந்துள்ளனர். பழிக்கு பழியாகத்தான் இந்த கொலை நடந்திருக்கும். மேலும் தேவமணியின் உறவினரான வைத்தீஸ்வரன்கோவில் காவல்நிலையத்தில் பணியாற்றும் எஸ்ஐ மீது டிஎஸ்பி ஒருவர் தலைமையில் தனிப்படை போலீசார் விசாரணை நடத்த உள்ளனர். அவரை கண்காணிக்கும் பணியில் போலீசார் உள்ளனர் என்றார்.

 

Advertisement

Related News