தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மக்களை மதரீதியாக பிரித்து ஆட்சியில் நீடிக்க விரும்பும் பாஜ: திருமாவளவன் தாக்கு

Advertisement

மதுரை: இந்து, கிறிஸ்தவர், இஸ்லாமியர் என மக்களை மத ரீதியாக பிரித்து வைத்து, ஆட்சியில் நீடிக்க விரும்புகிறது பாஜக என விசிக தலைவர் தொல்.திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார். மதுரை கே.கே.நகரில் மக்கள் நல்லிணக்க கூட்டமைப்பு சார்பில், மதநல்லிணக்க மாநாடு நேற்று நடைபெற்றது. இதில் மதுரை மார்க்சிஸ்ட் கட்சி எம்.பி வெங்கடேசன் பேசுகையில், ‘‘1990களில் ஆர்எஸ்எஸ் கும்பல் பல்வேறு முயற்சிகளை செய்து தோற்றுப் போய் ஓடினர். இப்போது மீண்டும் ஒன்றிய அரசின் உதவியுடன் பிரச்னைகளை உருவாக்குகின்றனர்’’ என்றார்.

இதையடுத்து விசிக தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி பேசியதாவது: இந்து மத நம்பிக்கை வேறு. அதனை பயன்படுத்தி அரசியல் செய்வது வேறு. மத குருமார்களை வைத்து அரசியல் செய்வதை நாம் கண்டிக்க வேண்டும். சங்கராச்சாரியார்கள் பாஜவை கண்டிக்காமல் இருக்கின்றனர். சிறுபான்மையினர் மீது வெறுப்பை விதைக்கின்றனர். நாம் அனைவரும் இந்தியன் என்ற உணர்வில் வெள்ளையனை வெளியேற்ற போராடினோம். ஆனால், பாரதீய ஜனதா இந்து, கிறிஸ்தவர், இஸ்லாம் என மக்களை மத ரீதியாக பிரித்து, ஆட்சியில் நீடிக்க விரும்புகிறது.

ஓபிசி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு கொடுக்கக் கூடாது என, பாஜவினர் வன்முறையை கட்டவிழ்த்து விட்டனர். ஆனால், பொருளாதாரத்தில் நலிவடைந்த முன்னேறிய பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை ஒரே நாளில் கொண்டு வந்து, ஓபிசி பிரிவினருக்கு துரோகம் செய்தனர். இந்த நாட்டில் சட்டம், ஒழுங்கை பாதுகாக்க வேண்டும் என்றால், மத நல்லிணக்கத்தையும் பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement

Related News