Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

எம்.பி.பி.எஸ். இடங்கள் குறைவதை தடுக்க தவெக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

சென்னை: தனியார் மருத்துவ கல்லூரிகள் நிகர்நிலை பல்கலை.களாக மாற்றப்பட்டால் 600 எம்.பி.பி.எஸ். இடங்கள் குறையும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். எம்.பி.பி.எஸ். இடங்கள் குறைவதை தடுக்க தவெக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒவ்வொரு மருத்துவக் கல்லூரிக்கும் கூடுதல் இடங்களை பெற ஒன்றிய அரசிடம் அனுமதி பெற வேண்டும். 600 எம்.பி.பி.எஸ். இடங்கள் குறைவதன் மூலம் ஏழை மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. அரசு மருத்துவக் கல்லூரிக்கு கூடுதல் இடங்களை பெறுவதன் மூலம், எம்.பி.பி.எஸ். இடங்கள் இழப்பை சரி செய்ய முடியும் என்று கூறினார்.