தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆயத்த ஆடைகளின் மீது 18% ஜி.எஸ்.டி விதிக்க எதிர்ப்பு: 1 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழப்பார்கள் என எச்சரிக்கை

Advertisement

சென்னை: ஆயுத்த ஆடைகள் மீது 18 சதவீத சரக்கு மற்றும் சேவை வரிக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள உற்பத்தியாளர்கள் இதனால் 1 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழப்பார்கள் என்றும் கவலை தெரிவித்துள்ளனர். 5% ஜி.எஸ்.டி. வரியை 18% ஆக உயர்த்த ஒன்றிய அமைச்சர்கள் குழு பரிந்துரை செய்துள்ளது. ரூ.1,500 முதல் ரூ.10,000 வரையுள்ள ஆயுத்த ஆடைகளுக்கு 18% ஜி.எஸ்.டி விதிக்க அமைச்சர்கள் குழு பரிந்துரைத்துள்ளது. ரூ.10,000 க்கு மேல் விலையுள்ள ஆயுத்த ஆடைகள் மீது 28% ஜி.எஸ்.டிவிதிப்பது அதில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ஆனால் ஆயுத்த ஆடைகள் மீதான ஜி.எஸ்.டியை உயர்த்துவதால் விற்பனை பாதிக்கும் என ஆயுத்த ஆடை உற்பத்தியாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். ஆயுத்த ஆடைகள் விற்பனை பாதிக்கப்பட்டால் ஒரு லட்சம் தொழிலாளர்கள் வேலை இழக்கும் நிலை ஏற்படும் எனவும் அவர்கள் கூறியுள்ளனர். ஜி.எஸ்.டி. வரி உயர்வால் நூற்பாலைகள், பின்னலாடை மற்றும் ஆயுத்த ஆடை தயாரிப்பு தொழில் பாதிக்கப்படும் என்றும் உற்பத்தியாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர். ஜி.எஸ்.டி. வரி உயர்வால் ஆயுத்த ஆடை தொழிற்துறையில் வருமானம் 25% குறையும் என்றும் புகார் தெரிவித்துள்ளனர். எனவே வரியை உயர்த்தும் பரிந்துரையை கைவிடுமாறும் ஆயத்த ஆடை தயாரிப்பாளர் சங்கம் ஒன்றிய அரசை வலியுறுத்தியுள்ளது.

Advertisement