ராஜபாளையம் அருகே மீன்கொத்தி பாறை அருவியில் மூழ்கி பிளஸ் 1 மாணவர் சாவு
Advertisement
அப்போது திடீரென்று சக்தி மகேஸ்வரன் கால் வழுக்கி ஆழமான பகுதிக்கு சென்று மூழ்கினார். உறவினருக்கும் நீச்சல் தெரியாததால் அவரை காப்பாற்ற முடியவில்லை. எனவே உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தார். ராஜபாளையம் தீயணைப்பு நிலைய அலுவலர் சீனிவாசன் தலைமையிலான வீரர்கள் விரைந்து வந்தனர். சுமார் 12 அடி ஆழத்தில் மூழ்கி கிடந்த சக்தி மகேஸ்வரனின் உடலை மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து ராஜபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Advertisement