தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மழையையும் பொருட்படுத்தாமல் சபரிமலையில் இன்று குவிந்த பக்தர்கள்

Advertisement

திருவனந்தபுரம்: சபரிமலையில் இன்று அதிகாலை முதல் மழை பெய்து வருகிறது. மழையை பொருட்படுத்தாமல் ஏராளமான பக்தர்கள் வரிசையில் இன்று சாமி தரிசனம் செய்தனர். சபரிமலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு வரை மண்டல, மகரவிளக்கு காலங்களில் அதிகபட்சமாக 15 மணிநேரம் மட்டுமே நடை திறந்திருக்கும். கடந்த 2 வருடங்களாக பக்தர்கள் வருகை அதிகமாக இருக்கும் நாட்களில் மட்டும் ஒன்று அல்லது 2 மணிநேரம் தரிசன நேரம் அதிகரிக்கப்பட்டது.

இந்த வருடம் மண்டல காலத்தின் முதல் நாளில் இருந்தே தரிசன நேரம் அதிகரிக்கப்பட்டு உள்ளது. முதல் நாளில் மாலை 5 மணிக்குப் பதிலாக 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது. பின்னர் அதிகாலை 3 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், மாலை 3 மணி முதல் இரவு 11 மணி வரையிலும் 18 மணிநேரம் நடை திறக்கப்பட்டு உள்ளது. இதனால் பக்தர்களுக்கு தரிசனம் செய்ய அதிக நேரம் கிடைத்து உள்ளது. இதன் காரணமாக தற்போது பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்காமல் உடனுக்குடன் தரிசனம் செய்து திரும்புகின்றனர். கடந்த சனி, ஞாயிறு ஆகிய விடுமுறை நாட்களில் கூட பக்தர்கள் சிரமம் இல்லாமல் எளிதில் தரிசனம் செய்யும் நிலை காணப்பட்டது.

இதற்கிடையே நடைதிறந்த 5 நாளில் 3.30 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இந்தநிலையில் இன்று அதிகாலை முதல் சபரிமலையில் மழை பெய்து வருகிறது. ஆனாலும் மழையை பொருட்படுத்தாமல் பக்தர்கள் பம்பையில் இருந்து மலையேறி ஐயப்பனை தரிசனம் செய்து வருகின்றனர். இன்று அதிகாலை 3 மணிக்கு நடை திறந்தபோது தரிசனத்திற்காக பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement