தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

டெல்டாவில் பலத்த மழை; 100 ஏக்கர் சம்பா மூழ்கியது

திருச்சி: டெல்டா மாவட்டங்களில் நேற்றும் பல்வேறு இடங்களில் கனமழை கொட்டியது. திருச்சியில் நேற்று பகலில் வெயில் சுட்டெரித்த நிலையில் இரவு 7 மணிக்கு தொடங்கிய மழை 1.30 மணி நேரம் கொட்டியது. தாழ்வான பகுதிகள், வீதிகள், சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதேபோல் திருச்சி புறநகர் பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது.

Advertisement

கரூரில் மாலை 6 மணி முதல் 9 மணி வரை மழை பொழிந்தது. மயிலாடுதுறை மாவட்டத்தில் மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரை இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களிலும் மழை பொழிந்தது.

திருவிடைமருதூர் தாலுகா சன்னாபுரம், கோவில் சன்னாபுரம், திருவிடைமருதூர் ஆகிய இடங்களில் சில நாட்களுக்கு முன்பு நடவு செய்யப்பட்ட சுமார் 100 ஏக்கர் சம்பா இளம் நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி உள்ளன. சன்னாபுரம், கோவில் சன்னாபுரம் ஆகிய இடங்களில் உள்ள வடிகால் வாய்க்கால்கள் தூர்வாரப்படாமல் புதர் மண்டி கிடக்கிறது. இதனால் தண்ணீர் வடிய வழியில்லாமல் உள்ளது. எனவே அரசு போர்க்கால அடிப்படையில் புதர் மண்டி கிடக்கும் வடிகால் வாய்க்காலை தூர் வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

Related News