தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மழை பாதிப்பு.. அனைத்து ரேஷன் அட்டைக்கும் ரூ.5 ஆயிரம்; உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ரூ.5 லட்சம்: புதுச்சேரி அரசு நிவாரணம் அறிவிப்பு!!

Advertisement

புதுச்சேரி: புதுச்சேரியில் அனைத்து ரேஷன் அட்டைக்கும் ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். ஃபெஞ்சல் புயல் மகாபலிபுரம் - புதுச்சேரி இடையே கரையைக் கடந்த நிலையில், மரக்காணம் பகுதியில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்திச் சென்றது. புதுச்சேரி நகரமே வெள்ளக் காடாக மாறியது. இந்நிலையில், புதுச்சேரியில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதல்வர் ரங்கசாமி நிவாரணம் அறிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் ரங்கசாமி கூறியதாவது;

புதுச்சேரியில் அனைத்து ரேஷன் அட்டைக்கும் ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும். குடிசை வீடுகளுக்கு ரூ.20 ஆயிரம் மற்றும் வீடுகளுக்கு ரூ.10 ஆயிரம் வழங்கப்படும். மாடு உயிரிழப்புக்கு ரூ.40 ஆயிரம்; இளம் கன்றுக்குட்டிக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணமாக வழங்கப்படும். விவசாய நிலம் ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும்.

மேலும், மழை வெள்ளத்தில் சேதமடைந்த படகுகளுக்கு தலா ரூ.10,000 நிவாரணமாக வழங்கப்படும். மழை வெள்ள நிவாரண பாதிப்புக்காக ரூ.100 கோடி வழங்கக் கோரி ஒன்றிய அரசுக்கு முதல்வர் ரங்கசாமி கடிதம் அனுப்பியுள்ளார். வெள்ளத்தில் மூழ்கிய வாகனங்களை சரி செய்ய காப்பீட்டு நிறுவனங்களுடன் பேசி வருகிறோம். புதுச்சேரியில் மழை வெள்ளத்தால் உயிரிழந்த 4 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Related News